தமிழக மருத்துவமனைகளுக்கு தடுப்பூசிகள் ஒதுக்கீடு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
மருத்துவமனைகளுக்கு தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி தனியார் மருத்துவங்களில் தினசரி தடுப்பூசி பயன்பாடு தகவலை உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி:
மத்திய அரசு கொரோனா தடுப்பூசி உற்பத்தி மையத்தில் இருந்து தடுப்பூசிகளை கொள்முதல் செய்து அதை மாநில அரசுகளுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில் தொடக்கத்தில் இருந்தே தமிழகத்திற்கும் குறைந்த அளவிலான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது என்று குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகிரது. சமீபத்தில் கொரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டை மாநிலங்களில் மக்கள் தொகைக்கு ஏற்ப வழங்க வேண்டும் என்றும் அரசு மருத்துவமனைகளுக்கான ஒதுக்கீட்டை 90 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
ஜூலை 16 வரை தலைநகர், புறநகரில் ஊரடங்கு உத்தரவு – மலேசியா அரசு!
இதனை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசுக்கு வலியுறுத்தி கடிதம் ஒன்றை எழுதினார். அதேபோல் மாநிலத்தில் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு மருத்துவமனைகளில் அதிக அளவில் நாடி வருவதால் தனியார் மருத்துவமனைக்கு ஒதுக்கீடு செய்யும் தடுப்பூசி 10% அளவில் மட்டுமே வழங்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மருத்துவமனைக்கு கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு குறித்து தமிழக சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி கூடுதல் தடுப்பூசிகள் பெற விரும்பும் தனியார் மருத்துவமனைகள் கோவின் என்னும் செயலியில் பதிவு செய்ய வேண்டும் என்றும் புதிய மருத்துவமனைகளுக்கு படுக்கைகள் மற்றும் பயன்பாட்டின் அடிப்படையில் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேபோல் தனியார் மருத்துவமனைகளில் தினசரி தடுப்பூசி பயன்பாடு தொடர்பான தகவலை உடனே பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.