தமிழகத்தில் இன்றுடன் பிரச்சாரம் நிறைவு, பிப்.19ம் தேதி பொது விடுமுறை – உள்ளாட்சி தேர்தல் அப்டேட்ஸ்!
தமிழகத்தில் பிப்ரவரி 19ம் தேதியன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் அன்று ஒரு நாள் மட்டும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்றுடன் (பிப்.17) தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது விடுமுறை
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ம் தேதியன்று ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. மேலும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ம் தேதியன்று மேற்கொள்ளப்பட இருக்கிறது. இப்போது உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் (பிப்.17) முடிவுக்கு வருவதால், அனைத்து கட்சிகளும் தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 12,500க்கும் மேற்பட்ட பதவிகளுக்கு மொத்தம் 57,600 வேட்பாளர்கள் தேர்தல் களம் காண உள்ளனர்.
இப்போது தேர்தல் நடத்தை விதிகளின்படி அரசியல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் பிரச்சாரங்கள் அனைத்தும் வாக்குப்பதிவு நடைபெறும் 48 மணி நேரத்துக்கு முன்பாக முடிந்து விட வேண்டும். அந்த வகையில் இன்று (பிப்.17) மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவுக்கு வருவதால் அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களும், தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளதால் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் விநியோகிப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பிறந்தநாளுக்கு போக ஹேமாவை தூண்டிவிடும் சௌந்தர்யா வேணு, பாரதி சம்மதிப்பாரா? இன்றைய எபிசோட்!
தொடர்ந்து தேர்தல் நடக்கும் பகுதிகள் மற்றும் அதைச் சுற்றி சுமார் 5 கிமீ தூரத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் இன்று (பிப்.17) முதல் 19ம் தேதி வரையிலும் பிப்ரவரி 22ம் தேஹத்தியன்றும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவு நாளன்று பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக பிப்ரவரி 19ம் தேதி ஒரு நாள் மட்டும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 19ம் தேதியன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.