வாகன ஓட்டிகள் கவனத்திற்கு – முதல்ல ருல்ஸ்ஸா பாலோ பண்ணுங்க.. மீறினால் நடவடிக்கை!

0
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு - முதல்ல ருல்ஸ்ஸா பாலோ பண்ணுங்க.. மீறினால் நடவடிக்கை!
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு - முதல்ல ருல்ஸ்ஸா பாலோ பண்ணுங்க.. மீறினால் நடவடிக்கை!
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு – முதல்ல ருல்ஸ்ஸா பாலோ பண்ணுங்க.. மீறினால் நடவடிக்கை!

நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் முக்கிய அறிவுரை ஒன்று வழங்கப்பட்டு இருக்கிறது.

அரசு அறிவுரை

இந்தியாவில் தற்போது பல இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகள் போடப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் பல பகுதிகளில் நெடுஞ்சாலைகள் போடப்பட்டு வருகின்றன. அதனால் அந்த பகுதிகளில் மக்கள் அதிக அளவில் பயணம் செய்கின்றனர். ஆனால் மக்களுக்கு அதில் பயணம் செய்ய கடைபிடிக்க வேண்டிய விதிகள் குறித்த புரிதல் இல்லாமல் இருக்கிறது. அதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் அதிகம் ஏற்படுகின்றன. இந்நிலையில் நெடுஞ்சாலைகளில் இருக்கும் போர்ட் ஒன்றை பற்றி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை துறை முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கி இருக்கிறது.

Follow our Instagram for more Latest Updates

அதன் படி சாலைகளில் நீல நிற போர்டில் சிவப்பு நிறத்தில் கிராஸ் மார்க் இருந்தால், அதற்கு நோ ஸ்டாப் குறியீடு என அர்த்தம். அதனால் அந்த பகுதிகளில் வாகனத்தை மெதுவாக ஓட்ட கூடாது எனவும், இடையே நிறுத்த கூடாது எனவும், பார்க்கிங் செய்ய கூடாது எனவும், ஒரு நொடி கூட நின்று யாரையும் பிக்அப் செய்ய கூடாது என அர்த்தம். அந்த குறியீடு போட்டிருக்கும் இடத்தில் வாகனத்தை நிறுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரட்டிப்பு லாபம் தரும் அசத்தலான அஞ்சலக திட்டம் – உடனே இணையுங்கள்!

மேலும் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வாகனம் ஓட்டும் போது இந்த குறியீடு இருந்தால் அந்த சாலையில் வாகனத்தை நிறுத்தாமல் செல்ல வேண்டும். மீறி நிறுத்தினால் விபத்து ஏற்படும்.எனவே மக்கள் மத்தியில் விபத்துகளை குறைக்க சாலை விதிகளில் போதிய விழிப்புணர்வு இருக்க வேண்டும் என்பதால் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!