தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கம், கோவில்கள் திறப்பு? ஐகோர்ட் மறுப்பு!
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் இருப்பதால் அரசின் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் கோவில்கள் மற்றும் பொதுப்போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் பொது போக்குவரத்து மற்றும் கோவில்கள் திறக்க உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் பயணிகள் ரயில் ரத்து எதிரொலி – வருவாய் இழப்பு!
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கொரோனா பரவலில் அனைத்து நடவடிக்கையும் எடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உரிமை வழங்கி உள்ளது. மேலும் கொரோனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளில் அரசின் முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் மூன்றாம் அலை தாக்கம் இருப்பதால் உடனடியாக இயல்பு நிலைக்கு திருப்ப முடியாது எனவும் தெரிவித்துள்ளது. தளர்வுகள் வழங்கப்பட்டாலும் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.