இன்று தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர்… கட்டாயம் இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க – விவரம் உள்ளே!
நாட்டில் 2023ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (31.01.2023) தொடங்கிய நிலையில் இதில் என்னவெல்லாம் இடம்பெற உள்ளன என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
கூட்டத்தொடர்:
2023-24ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து, நாளை (பிப்ரவரி 1) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் 2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும் பட்ஜெட் ஆவணங்களை ஆய்வு செய்ய 27 அமர்வுகள் நடைபெறுகிறது. இவை ஒரு மாத கால இடைவெளியுடன் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறுகிறது.
தனியார் இசேவை மையங்களுக்கு முக்கிய எச்சரிக்கை – மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்!
Follow our Instagram for more Latest Updates
இந்த கூட்டத்தொடரின் முதல் பகுதி இன்று முதல் பிப்ரவரி 14ம் தேதி வரையும், அத்துடன் 2ம் பகுதி மார்ச் 12ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த வருடத்தின் முதல் கூட்டத்தொடர் என்பதால் முதலாவதாக குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது. அதன்பின்பு பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். இந்த பொருளாதார ஆய்வறிக்கையை சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்வார்.
அதன்பின்பு, இந்த விவரங்களை தலைமைப் பொருளாதார ஆலோசகர் அறிவிப்பார். இதையடுத்து 36 மசோதாக்களை இந்த அமர்வின் போது கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் நடப்பு நிதியாண்டு மார்ச் 31 உடன் முடிவடையும் நிலையில், முந்தைய ஆண்டில் 8.7 சதவீதமாக இந்திய பொருளாதாரம் தற்போது 7 சதவீதமாக உள்ளது. அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி மதிப்பீடு 9 சதவீதம் முதல் 6.8 சதவீதம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.