2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு ரூ.75000 உயர்வு? வெளியான தகவல்!!
மத்திய அரசு 2023 – 2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த பட்ஜெட்டில் மாத சம்பளம் பெறுபவோரின் வருமான வரி விலக்கு தொகை அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட்:
நாட்டில் 2023 – 2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான பட்ஜெட் வருகிற பிப்ரவரி 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் பணவீக்க விகிதத்தைக் கருத்தில் கொண்டு நிதியமைச்சர் மாத சம்பளதாரர்களுக்கு நிவாரணங்களை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக பள்ளி, கல்லூரிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை – குஷியில் மாணவர்கள்!
அந்த வகையில், மாத சம்பள வர்க்கத்தினருக்கான நிலையான விலக்கு வரம்பு அதிகரிக்கப்படும் என வரி நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். ஏனெனில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு வீட்டில் இருந்து வேலை பார்த்த ஊழியர்கள் தற்போது அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதனால் இவர்களுக்கு வீட்டு வாடகை, போக்குவரத்து, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் ஏற்படக்கூடும். அதனால் மாத சம்பளம் பெறுபவர்களுக்கு ஸ்டாண்டர்ட் டிடக்ஷன் நிவாரணம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டாண்டர்ட் டிடக்ஷன் என்பது ஊழியர்களின் போக்குவரத்து, மருத்துவம் உள்ளிட்ட செலவுகளை அடிப்படையாக கொண்டு ஊழியர்கள் செலுத்தும் வருமான வரியிலிருந்து கழிக்கப்படும். கடந்த 2018ம் ஆண்டு ஸ்டாண்டர்ட் டிடக்ஷன் ரூ.40000 ஆகவும் அதன்பின்பு, கடந்த ஆண்டு ரூ.50000 ஆகவும் உயர்த்தப்பட்டது. தற்போது வெளியாக இருக்கும் பட்ஜெட்டில் ஸ்டாண்டர்ட் டிடக்ஷன் தொகை ரூ.75,000 ஆக உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக மாத சம்பளம் பெறும் வரி செலுத்துவோருக்கு தேவையான நிவாரணம் கிடைக்கும்.