பூத் சிலிப் மூலம் வாக்களிக்க முடியுமா? – தேர்தல் ஆணையம் தகவல்!
நாடாளுமன்றத்தின் மக்களவை தேர்தல் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
பூத் ஸ்லிப் ஆவணம்:
இந்திய தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத்தின் மக்களவையின் 543 தொகுதிகளுக்கான உறுப்பினர்களை தேர்வு செய்யும் லோக் சபா தேர்தலை வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கி ஜூன் -1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடத்த உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் நாலாம் தேதி அன்று நடைபெறும். இந்நிலையில் தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் வாக்களிக்க பயன்படுத்தும் ஆவணங்கள் தொடர்பான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. ஆதார் அட்டை உட்பட வாக்களிக்க தகுதியான 12 ஆவணங்களை பயன்படுத்தி வாக்காளர்கள் வாக்களிக்க முடியும்.
ஒரு சவரன் ரூ.52,000 யை தாண்டி விற்கும் தங்கம் விலை – இனி நகை வாங்குவது கனவு தான் ….!
ஆனால் பூத் ஸ்லிப்பை அடையாளம் ஆவணமாக கொண்டு வாக்களிக்க முடியாது என தெரிவித்துள்ளது. இம்முறை பூத் ஸ்லிப்பில் புகைப்படத்துடன் வாக்காளரின் விவரங்கள் அச்சிடப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர் அடையாள அட்டையில் வாக்காளரின் பெயரில் சிறிய எழுத்து பிழைகள் இருந்தால் அதன் மூலம் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.