பூஸ்டர் கொரோனா தடுப்பூசி செலுத்த தேவையான ஆவணங்கள் – முழு விபரங்கள் இதோ!
கொரோனாவில் இருந்து மாறுபாடு அடைந்த ஓமைக்ரான் வேகமாக பரவி வருவதால் 2வது டோஸ் செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் எனப்படும் 3வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாக அரசு தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தேவையான ஆவணங்கள் பற்றி இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.
பூஸ்டர் தடுப்பூசி
கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதில் குறிப்பாக 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுடைய அனைவரும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்தி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர். தற்போது தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய அனைவரும் பூஸ்டர் டோஸ் எனப்படும் 3வது டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த பூஸ்டர் தடுப்பூசியை வருகிற ஜனவரி 10ம் தேதி முதல் செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – முதல்வரின் ஜாக்பாட் அறிவிப்பு!
முதற்கட்டமாக இணை நோயால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மற்றும் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் ஜனவரி 3ம் தேதி அன்று 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. எந்த வகை தடுப்பூசி மருந்து 2 டோஸ் தடுப்பூசியில் பயன்படுத்தபட்டதோ அதனை இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு பயன்படுத்த வேண்டும். அதாவது கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசியை முதல் 2 தவணைகளாக செலுத்தியவர்கள் அதே வகை தடுப்பூசி மருந்தை பூஸ்டர் தடுப்பூசிக்கும் செலுத்த வேண்டும்.
ஜனவரி 7 வரை 10 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு! முழு விபரம் இதோ!
இந்த தடுப்பூசியானது 2வது டோஸ் செலுத்திய 9 மாதங்கள் அல்லது 12 மாதங்களுக்கு பிறகு செலுத்தப்பட வேண்டும். தற்போது இந்த பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தேவையான ஆவணங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்த விரும்பும் இணை நோயால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் மருத்துவர்களிடம் இருந்து ஏதேனும் சான்றிதழ் பெற்றிருக்க தேவையில்லை என்றும் மேலும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திய போது உபயோகித்த பதிவு எண்ணை வைத்திருந்தால் மட்டும் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.