தமிழகத்தில் உள்ள 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தக விநியோகம் தொடக்கம் – முக்கிய அறிவிப்பு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 3ம் பருவ பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் தொடர்ந்து அடுத்தடுத்த கொரோனா வைரஸ் அலைகள் மக்களை துயரத்திற்கு ஆளாக்கி வருகிறது. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த புதிய வகை ஓமிக்ரான் தொற்று பரவ தொடங்கியது. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 28,000 ஐ நெருங்கியது. கட்டுக்கடங்காமல் பரவி வரும் வைரஸ் தொற்றை தடுக்கும் முயற்சியாக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – வீட்டு வாடகைப்படி உயர்வு!
இந்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. மாணவர்கள் வீட்டிலிருந்தே திருப்புதல் தேர்வுக்கு தயாராக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியது. இந்த நேரத்தில் அரசின் நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்து வந்ததை அடுத்து நேற்று முதல் தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 3ம் பருவ பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டது.
ஐபிஎல் 2022: மெகா ஏலத்தில் இருந்து விலகிய ஸ்ரீசாந்த் – ரசிகர்கள் அதிர்ச்சி!
அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின்பு தொடந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால் மூன்றாம் பருவ பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட பின் பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது. மேலும் பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் வகையில் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. தற்போது நகர்ப்புற தேர்தலை முன்னிட்டு மேலும் 5 நாட்கள் விடுமுறை விடப்படும் என்ற தகவல் வந்துள்ளது.