ஐபிஎல் 2022: மெகா ஏலத்தில் இருந்து விலகிய ஸ்ரீசாந்த் – ரசிகர்கள் அதிர்ச்சி!

0
ஐபிஎல் 2022: மெகா ஏலத்தில் இருந்து விலகிய ஸ்ரீசாந்த் - ரசிகர்கள் அதிர்ச்சி!
ஐபிஎல் 2022: மெகா ஏலத்தில் இருந்து விலகிய ஸ்ரீசாந்த் - ரசிகர்கள் அதிர்ச்சி!
ஐபிஎல் 2022: மெகா ஏலத்தில் இருந்து விலகிய ஸ்ரீசாந்த் – ரசிகர்கள் அதிர்ச்சி!

ஐபிஎல் 2022 ஆம் ஆண்டுக்கான மெகா ஏலத்தில் இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் எஸ் ஸ்ரீசாந்த், அவரது 7 ஆண்டு தடை முடிவடைந்ததை அடுத்து தனது பெயரை அடிப்படை விலையான ரூ. 50 லட்சத்திற்கு பதிவு செய்தார். நேற்று வெளியான ஏலத்தின் வீரர்களின் இறுதி பட்டியலில் ஸ்ரீசாந்த் சேர்க்கப்படவில்லை. தற்போது இது குறித்து ஒரு இதயப்பூர்வமான செய்தியை ஸ்ரீசாந்த் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

ஏலத்தின் இறுதி பட்டியல்:

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 வீரர்கள் ஏலப் பட்டியல் 2022 பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் இரண்டு நாள் மெகா ஏலத்தின் போது மொத்தம் 590 கிரிக்கெட் வீரர்களை உள்ளடக்கிய பட்டியல் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை ரூ.2 கோடியே அதிக விலையாகும். மேலும் 48 வீரர்கள் 2 கோடியை அடிப்படை விலையாக கொண்டு அணியில் இடம்பிடிக்க தேர்வு செய்துள்ளனர். மேலும் 1.5 கோடி ரூபாய் கையிருப்பு விலையுடன் 20 வீரர்கள் ஏலப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – RD வட்டி விகிதங்கள் உயர்வு!

இதை தொடர்ந்து இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் எஸ் ஸ்ரீசாந்த், அவரது 7 ஆண்டு தடை முடிவடைந்ததை அடுத்து மெகா ஏலத்தில் தனது பெயரை அடிப்படை விலையான ரூ. 50 லட்சத்திற்கு ஏலத்தில் இந்த ஆண்டு பதிவிட்டார். கடந்த ஆண்டு ஸ்ரீசாந்த் 75 லட்சத்துக்கு ஐபிஎல் ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. 2013 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய ஸ்ரீசாந்த் ஐபிஎல் சூதாட்டத்தில் சிக்கினார். இதனால் ஸ்ரீசாந்துக்கு ஐபிஎல் தொடரில் விளையாட ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஸ்ரீசாந்த் கிரிக்கெட் விளையாடுவதை தவிர்த்து சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு கடிதம்!

இந்நிலையில் ஐபிஎல் யில் புதிதாக 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் தனக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் இந்த ஆண்டு ஏலத்தில் தனது பெயரை அடிப்படை விலையான ரூ. 50 லட்சத்திற்கு பதிவிட்டார். ஆனால் நேற்று வெளியான ஏலத்தின் வீரர்களின் இறுதி பட்டியலில் ஸ்ரீசாந்த் சேர்க்கப்படவில்லை. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது இது குறித்து ஒரு இதயப்பூர்வமான செய்தியை ஸ்ரீசாந்த் தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார். அதில் ‘எல்லோரையும் நேசிக்கிறேன் உங்கள் அனைவருக்கும் போதுமான நன்றி சொல்ல முடியாது. இறுதி ஏலத்திற்கான உங்கள் பிரார்த்தனையில் என்னையும் வைத்திருங்கள்..”ஓம் நம சிவயா” என்று கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!