அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – வீட்டு வாடகைப்படி உயர்வு!
தமிழகத்தில் வசிக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி உயர்வு அளிக்கப்படுவதாக, அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த அறிவிப்பு குறித்து தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, தலைமை கணக்காயர் உள்ளிட்டோருக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வீட்டு வாடகைப்படி உயர்வு:
இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு காரணமாக மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் வழங்காமல் இருந்தது. ஆனால் தற்போது நிலைமை சற்று சீரடைந்து வருவதால் மீண்டும் அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சலுகை அறிவிப்புகளை மத்திய, மாநில அரசு அறிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் 7 வது ஊதியக் குழுவின் பரிந்துரை படி, 2022ம் ஆண்டுக்கான அகவிலைப்படி உயர்வு, அண்மையில் வெளியானது.
ஐபிஎல் 2022: மெகா ஏலத்தில் இருந்து விலகிய ஸ்ரீசாந்த் – ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்நிலையில், தற்போது தமிழகத்தில் பணியில் உள்ள மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடகைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு தொடர்பாக தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, தலைமை கணக்காயர் உள்ளிட்டோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்த கடிதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதியக் குழுவின் பரிந்துரை அடிப்படையில் , மாநகராட்சிகளில் வசிக்கும் அரசு ஊழியா்களுக்கு 24% தில் இருந்து 27 %ஆக வீட்டு வாடகைபடி உயர்த்தி வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு கடிதம்!
மேலும் நகராட்சிகளில் வசிப்பவர்களுக்கு 16 %ல் இருந்து 18% ஆகவும், ஊரகப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 8 %ல் இருந்து 9 %ஆகவும் வாடகைப்படி உயா்வு அமல்படுத்தப்படுகிறது. இந்தத் தொகையை, கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும் என இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த வகையில், வீட்டு வாடகைப் படி உயர்வு, தமிழக அரசு ஊழியர்களுக்கு பொருந்தாது என தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு குறிப்பிட்டுள்ளார்.