பொங்கலுக்கு தமிழக அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. முதல்வரின் சர்ப்ரைஸ் அறிவிப்பு – Pongal Bonus!
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தற்போது மாநில அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பொங்கல் போனஸ்:
வரும் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சமீபத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பு அரசால் வெளியிடப்பட்டது. தற்போது முதல்வர் ஸ்டாலின், மாநில அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பை வெளியிட்டு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளார்.
Follow our Instagram for more Latest Updates
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட முதல்வர் ஆணையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிகழ்வுகள் – 27 டிசம்பர் 2022 | 27th December Current Affairs!
Exams Daily Mobile App Download
இந்த அறிவிப்பின் கீழ் ஒவ்வொரு துறையை சேர்ந்த ஊழியர்கள் எவ்வளவு பொங்கல் பரிசு பெறுவார்கள் என கீழே காணலாம்:
- C & D பிரிவை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ரூ. 3,000 என்ற உச்சவரம்பிற்குட்பட்டு மிகை ஊதியம் பெறுவார்கள். அதே சமயம் C & D பிரிவை சேர்ந்த பென்ஷன்தாரர்கள் மற்றும் குடும்ப பென்ஷன்தாரர்கள், முன்னாள் கிராம பணியமைப்பு மற்றும் அனைத்து வகை தனி பென்ஷன்தாரர்கள் போன்றோர் ரூ. 500 பொங்கல் பரிசு பெறுவார்கள்.
- அதோடு தொகுப்பூதியம், சிறப்புக் கால முறை ஊதியம் பெறும் ஊழியர்கள், மற்றும் நிதியாண்டில் குறைந்தது 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக வேலை பார்த்து சில்லறை செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் ஆகியோர் ரூ. 1,000 சிறப்பு மிகை ஊதியம் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.