CBSE மாணவர்களுக்கு தேர்வு இறுதி மதிப்பீடு – கல்வி வாரியம் அறிவிப்பு!
CBSE 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்த பிறகு அம்மாணவர்களுக்கு வழங்கப்படும் தேர்வு மதிப்பெண்கள் குறித்த முக்கிய அறிவிப்புகளை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
தேர்வு முடிவுகள்
கடந்த மே மாதம் 4 ஆம் தேதி முதல் CBSE மாணவர்களுக்கு நடத்தப்பட வேண்டிய 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, அம்மாணவர்களுக்கான தேர்வுகளை ரத்து செய்வதாக கடந்த ஜூன் 1 ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதன் மூலம் நெடு நாட்களாக தேர்வுகள் நடக்குமா என்ற குழப்பத்துக்கு முடிவு கிடைத்தது.
தமிழகத்தில் ஜூன் 14 முதல் பள்ளிகள் திறப்பு – தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை!
இதற்கு பிறகு CBSE மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் முறை குறித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், அதனுடன் இணைந்த பள்ளிகளுக்கு மதிப்பீட்டு நடைமுறை மற்றும் வைவா மதிப்பெண்கள் உள்ளிட்ட உள் மதிப்பீட்டை CBSE இன் அதிகாரப்பூர்வ வலைதளமான cbse.nic.in இல் பதிவேற்றுமாறு அறிவுறுத்தியது. அந்த வகையில் மாணவர்களின் உள்மதிப்பீட்டை, ஜூன் 21 ஆம் தேதிக்குள் CBSE இணையதளத்தில் பதிவிட அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் கொரோனா காரணமாக பல CBSE பள்ளிகளில் மாணவர்களுக்கு உள் மதிப்பீட்டு தேர்வு மற்றும் வைவா பரிசோதனை நடத்தப்படாததால், அவற்றை ஆன்லைன் வழியாக நடத்த தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன் படி வெளிப்புற தேர்வாளர் நியமிக்கப்படாத பாடங்களில், பாட சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர், பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி உள் மதிப்பீட்டை நடத்த வேண்டும் என தேர்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.