தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை நிலவரம்!!
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு மழை பெய்துள்ளது என்பது குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.
வானிலை அறிக்கை:
இன்று (ஜூன் 10) மற்றும் நாளை (ஜூன் 11) ஆகிய தினங்களில் தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். மேலும் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 12.06.2021 அன்று வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், ஒரு சில உள் மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
CBSE மாணவர்களுக்கு தேர்வு இறுதி மதிப்பீடு – கல்வி வாரியம் அறிவிப்பு!
13.06.2021 மற்றும் 14.06.2021 ஆகிய தினங்களில் வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், ஒரு சில உள் மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகம், வால்பாறை பரம்பிக்குளம் ஆழியார் தலா 2 செமீ, அவிநாசி, சின்னக்கல்லார், சேலம், சோலையாறு தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
வடக்கு வங்க கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதன் காரணமாக 10.06.2021 முதல் 13.06.2021 வரை தெற்கு வங்க கடல், மத்திய வங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
TN Job “FB
Group” Join Now![](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2021/03/RAILWAY-NEW-1.jpg)
11.06,2021 முதல் 14.06.2021 வரை கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 10.06.2021 முதல் 14.06.2021 வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.