இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் ட்விட்டர் கணக்கில் ப்ளூ டிக் நீக்கம் – ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களில் ஒருவராக கருதப்படும் மஹேந்திர சிங் தோனியின் ட்விட்டர் கணக்கில் இருந்த ப்ளூ டிக் செயல்பாடுகளை அந்நிறுவனம் நீக்கியுள்ளது. இதற்கான காரணத்தை அந்நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.
ப்ளூ டிக் நீக்கம்
தற்போது மத்திய அரசுக்கும், முன்னணி சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்துக்கும் இடையே ஒரு மோதல் போக்கு உருவாகியுள்ளது. அதாவது மத்திய அரசு வெளியிட்ட சமூக வலைதளங்களுக்கான கட்டுப்பாடுகளை ஏற்பதில் ட்விட்டர் நிறுவனத்துக்கு உடன்பாடு இல்லாததாக தெரிவித்துள்ளது. இதனிடையே இந்திய பிரபலங்கள் பதிவிடும் சில கருத்துக்களை ட்விட்டரில் இருந்து நீக்கியும், டிரம்ப் போன்ற அரசியல் தலைவர்களது கணக்குகளை முடக்கியும் வருகிறது.
புதுச்சேரியில் இன்று முதல் திரையரங்குகள் திறப்பு – ரசிகர்களுக்கு ஆபர்!
இந்த ட்விட்டர் செயலியை, உலக நாடுகளை சேர்ந்த பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உட்பட அனைவரும் பயன்படுத்துவதால், போலி கணக்குகளை ஊக்குவிக்க விரும்பாத ட்விட்டர் நிறுவனம் முக்கிய நபர்களை பின்தொடர்வதற்கு எதுவாக ப்ளூ டிக் குறியீடுகளை கொடுத்துள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான மஹேந்திர சிங் தோனியின் ட்விட்டர் பக்கத்தில் இருந்த ப்ளூ டிக்கை அந்நிறுவனம் நீக்கியுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதற்கான உண்மை காரணத்தை அந்நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. எனினும் ட்விட்டர் கணக்கில் சுமார் 8.2 மில்லியன் பின் தொடர்பவர்களை கொண்டுள்ள தோனியின் கணக்கில் இருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனிடையே டோனி இந்த ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி அன்று தனது கடைசி பதிவை ட்விட்டரில் செய்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.