பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து வரும் ட்விஸ்ட் – ஒரே இடத்திற்கு வரும் இரு குடும்பம்! சிக்கப்போகும் கோபி!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் இனியாவும், மயூராவும் ஒரே நாளில் சுற்றுலா செல்ல இருக்கும் நிலையில், அடுத்து கோபி எப்படி சிக்கப் போகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இரண்டு பக்கமும் கோபி எப்படி சமாளிக்க போகிறார் என்பது பற்றியும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. கோபி மயூராவிடம் இந்த வாரம் வெளியே சுற்றி பார்க்க போகலாம் என சொல்லி வாக்கு கொடுத்து இருக்கிறார். மறுபக்கம் வீட்டில் அதிகமாக சண்டைகள் வருவதால் இனியா எழிலிடம் வெளியே கூட்டிக் கொண்டு போக சொல்கிறார். எழில் அதற்கு சரி என சொல்ல கோபி கண்டிப்பாக வர வேண்டும் என இனியா ஆசைப்படுகிறார். நீங்கள் வராமல் இருந்தால் நான் பேசவே மாட்டேன் என இனியா சொல்லி இருக்கிறார்.
நாகசைதன்யாவுடன் உறவை முழுவதும் முறித்துக் கொண்ட சமந்தா – ரசிகர்கள் அதிர்ச்சி!
அதனால் கோபி மயூராவை சமாளிக்க செல்ல அவர் கோபப்படுகிறார். அப்போது ராதிகா இப்படி தான் எல்லாமே பண்றீங்க என கோவப்பட்ட உடனே கோபி கண்டிப்பாக நான் கூட்டிக் கொண்டு போகிறேன் என சொல்கிறார். இப்படி கதை சென்று கொண்டிருக்கும் நிலையில் அடுத்து வரும் எபிசோடுகளில் வரும் காட்சிகள் குறித்த புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அதன் படி கோபி ராதிகா பாக்கியாவை ஒரே இடத்திற்கு சுற்றுலா அழைத்து செல்ல இருக்கிறார்.
அப்போது இருவரிடமும் சென்று வருவது போல காட்சிகள் இருக்கும் மேலும் கோபி ராதிகா அல்லது பாக்கியாவிடம் சிக்க இருக்கிறார். அப்படி இல்லாமல் இருந்தால் வீட்டில் செல்வி அல்லது எழிலிற்கு ஏற்கனவே சந்தேகம் இருக்கிறது. தற்போது கூடுதலாக ஈஸ்வரிக்கு உண்மை தெரிய வருவது போல அடுத்து வரும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது. அதனால் நாளைய எபிசோடில் கோபி சிக்குவார் என எதிர்பார்த்து ரசிகர்கள் இருக்கின்றனர்.