துர்காவிற்கு உதவி செய்த பாரதி, வெண்பா பற்றிய உண்மையை சொல்லும் துர்கா – சீரியலில் அதிரடி திருப்பம்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் லக்ஷ்மிக்கு பாரதி தான் அப்பா என்ற பெரிய உண்மை தெரிந்துள்ளது. இந்நிலையில் அடுத்து வரப் போகும் எபிசோடுகளில் பாரதி துர்காவை சந்திக்க இருக்கிறார். துர்கா எல்லா உண்மையையும் சொல்ல பாரதி வெண்பாவை அழைத்து உண்மையை கேட்கப் போகிறார்.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியல் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. லட்சுமி அப்பாவை தேடி அலையும் காட்சிகள் எல்லாம் பார்க்க பரிதாபமாக இருந்தது. ஆனால் கண்ணம்மாவின் ஆதார் முகவரியை வைத்து லட்சுமி அப்பாவை தேட கடைசியில் பாரதி தான் அப்பா என்ற உண்மையை தெரிந்து கொள்கிறார். அதனால் சந்தோஷப்பட்டாலும் தன்னையும் அம்மாவையும் பிடிக்கவில்லை என்பதால் வருத்தமாக இருக்கிறார். அப்பா யார் என்று தெரிந்த நிலையில், பாரதியை சந்தித்து பேசுகிறார்.
TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – சிலபஸ், தேர்வு முறை பற்றிய முழு விவரம் இதோ!
அப்போது பாரதியை சாப்பாடு ஊட்டிவிட சொல்ல பாரதி நானே உன்னை வீட்டில் கொண்டு சென்று விடுகிறேன் என சொல்கிறார். அவர் லட்சுமியை வீட்டில் விட்டு வந்து கொண்டிருக்கும் வரும் வழியில் ஒருவர் அடிபட்டு கிடக்கிறார். அங்கே கூட்டமாக இருப்பதை பார்த்து பாரதி சென்று பார்க்க அங்கே காலில் ரத்தத்துடன் துர்கா அடிபட்டு கிடக்கிறார். அவருக்கு யாரும் உதவி செய்யாமல் இருக்கும் நிலையில் பாரதி உதவி செய்ய நினைக்கிறார்.
மருத்துவமனைக்கு அழைத்து சென்று எல்லா உதவிகளையும் செய்ய துர்கா நான் உங்களை தான் பார்க்க வந்தேன் என சொல்கிறார். அப்போது வெண்பாவின் திட்டங்களை பற்றி எல்லா உண்மையையும் துர்கா பாரதியிடம் சொல்கிறார். ஆனால் பாரதி முழுமையாக அவரை நம்பாமல் இது கண்ணம்மாவின் திட்டமாக இருக்குமா என நினைக்கிறார். அதனால் வெண்பாவை அழைத்து கேட்க, கண்ணம்மாவிற்கு டாக்டர் யாரையும் தெரியாது நீ தான் பண்ணியா என கேட்க வெண்பா என்ன சொல்வது என தெரியாமல் இருக்கிறார்.