தங்க நகை வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – ‘ஹால்மார்க்’ முத்திரை கட்டாயம்!
மக்கள் அனைவரும் பண்டிகை காலம் வருவதால் தங்க நகை வாங்குவதில் ஆர்வத்துடன் இருப்பார்கள். அவ்வாறு வாங்கும் போது ஹால்மார்க் முத்திரை இருப்பதை உறுதி செய்துகொண்டு வாங்குமாறு அரசு அறிவித்துள்ளது.
‘ஹால்மார்க்’ நகை:
நாடு முழுவதும் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஆனலும் இது பண்டிகை காலம் என்பதால் பெண்கள் நகைகள் வாங்குவதில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பார்கள். அவ்வாறு வாங்கும் போது நீங்கள் வாங்கும் நகையில் ஹால்மார்க் முத்திரை இருப்பதை உறுதி செய்துகொண்டு வாங்குங்கள் என்று அரசு அறிவித்துள்ளது. அதாவது தங்க நகைகள் முன்னர் 10 கிரேடுகளில் தர நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. தற்போது அது 3 கிரேடுகளாக மட்டும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.அந்த வகையில் 14 கேரட், 18 கேரட் மற்றும் 22 கேரட் என மூன்று கிரேடுகளில் மட்டுமே தங்க நகைகள் விற்பனை செய்யப்பட வேண்டும்.
இந்தியாவில் ஒரு வேலைக்கு 75 பேர் போட்டி – நேஷனல் கேரியர் சர்வீஸ் அறிக்கை!
அவ்வாறு விற்பனை செய்யப்படும் அனைத்து நகைகளிலும் பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை பதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற அரசு உத்தரவின் பேரில் கடந்த ஜூன்.15 தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த உத்தரவானது தங்க நகை வர்த்தகத்தில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்கும் விதமாக கொண்டுவரப்பட்டது. அதன்படி கடந்த ஜுன். 23 ம் தேதியிலிருந்து நாடு முழுவதிலும் உள்ள 256 மாவட்டங்களிலும் உள்ள அனைத்து நகை கடைகளிலும் ஹால்மார்க் முத்திரை பாதிக்கப்பட்ட நகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
JioPhone Next ஸ்மார்ட்போன் விற்பனை இன்று முதல் தொடக்கம் – ஆன்லைனில் புக் செய்வது எப்படி?
தற்போது பண்டிகை காலம் என்பதால் நுகர்வோர் நகை வாங்கும் போது ஹால்மார்க் முத்திரை தெரியவில்லை என்றால் பூதக்கண்ணாடி வைத்து பார்த்து உறுதி செய்த பின்னர் வாங்குமாறு ‘இந்திய தர நிர்ணய கழகம்’ மற்றும் ‘நுகர்வோர் விவகாரத் துறை’ அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் நகை வாங்கியதற்கான பில் அல்லது இன்வாய்ஸை கண்டிப்பாக கேட்டு பெறுமாறும் அறிவுறுத்தியுள்ளது. எனவே மக்கள் அரசின் அறிவுறுத்தலின்படி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.