ஒரே நாளில் 6,62,507 பேருக்கு கொரோனா தடுப்பூசி – பீகார் மாநிலம் சாதனை!
இந்தியாவில் பீகார் மாநிலத்தில் ஒரே நாளில் 6,62,507 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
பீகார் மாநிலம் முதலிடம்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலம் முழுவதும் ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டது. மேலும் மருத்துவ நிபுணர்களின் தொடர் முயற்சியால் கொரோனா தொற்றிற்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. மத்திய அரசு தடுப்பூசிகளை தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு DA அதிகரிப்பு – ரூ.32,400 வரை ஊதியம் உயர்வு!!
தற்போது கொரோனா வைரசுக்கு எதிராக நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசிகள் மட்டும் தான். எனவே மக்கள் அலட்சியம் காட்டாமல் உடனடியாக தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என அரசுகள் அறிவுறுத்துகிறது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. 18 முதல் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிப்பதை இந்திய அரசு நோக்கமாக கொண்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனை தொடர்ந்து பீகார் மாநிலத்தில் கடந்த புதன்கிழமை அன்று ஒரே நாளில் 6,62,507 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி பீகார் மாநிலம் புதிய சாதனை படைத்துள்ளது. நாட்டிலேயே ஒரே நாளில் 6 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகளை செலுத்திய முதல் மாநிலமாக பீகார் உள்ளது. சுகாதாரத்துறை கூடுதல் தலைமை செயலாளர் பிரத்யய் அம்ரித் இதனை உறுதி செய்துள்ளார். மேலும் மாநிலத்தில் அடுத்த 6 மாதத்துக்குள் 6 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதை பீகார் அரசு இலக்காக நிர்ணயித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.