பள்ளி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
கோடை விடுமுறை :
கொரோனா பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் மே மாதம் என்பதால் வெயிலின் தாக்கமும் அதிகமாக காணப்படுகிறது. இதனால் சராசரியை விட வெப்பநிலை அதிகமாக நிலவுகிறது. கடந்த வருட கொரோனா பரவல் காரணத்தினால் பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. பிறகு தொற்று பரவல் குறைய தொடங்கியதும் மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது.
தற்போது கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்து பரவி வருவதால் மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் கோடை விடுமுறைகளையும் அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து பீகார் மாநிலமும் பள்ளி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு மே 1 முதல் 15 வரை கோடை விடுமுறையை அறிவித்துள்ளது. மே 18ம் தேதி அறிவிக்க இருந்த கோடை விடுமுறை தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கையாக மே 1 தேதி முதலே விடுமுறை தொடங்குகிறது.
தமிழகத்திற்கு 2 வாரங்களில் 7.33 லட்சம் தடுப்பூசிகள் – மத்திய அரசு உறுதி!!
மேலும் கடந்த வருடத்திற்கான 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இந்த வருடம் பிப்ரவரி மாத்தில் நடைபெற்றது. இதன் முடிவுகள் மாத கடைசியில் வெளியாகும் எனவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. விடுமுறைக்கு பிறகு கொரோனா பரவல் நிலையை வைத்து அடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என அரசு அறிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்