தமிழகத்திற்கு 2 வாரங்களில் 7.33 லட்சம் தடுப்பூசிகள் – மத்திய அரசு உறுதி!!
தமிழகத்திற்கு 1.5 கோடி தடுப்பூசிகள் வழங்க மருத்துவக் கழகம் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் 2 வாரங்களில் 7.5 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்து பரவி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. தொற்று பாதிப்பால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் வைரஸ் பாதிப்பு தினம் புதிய உச்சம் அடைந்து வருகிறது. அதிகம் தொற்று பாதித்த மாநிலங்களில் தமிழகம் முக்கிய இடத்தில் இருந்து வருகிறது. தமிழக அரசு தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்குகளை அமல்படுத்தியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் புதிதாக 18,692 பேர் வைரஸ் தொற்றிற்கு ஆளாகியுள்ளனர். மேலும் 113 பேர் உயிரிழந்துள்ளனர். நோய் பரவல் தமிழகத்தில் அதிகரித்து வருவதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு சார்பில் வயதானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து 18 வயதிற்க்கு மேற்பட்டோர்க்கு மே 1 முதல் இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என அறிவித்திருந்தது.
தமிழகத்திற்கு 400 கோடி ஒதுக்கீடு – மத்திய அரசு அறிவிப்பு!!
இதற்காக 1.5 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மருத்துவக் கழகத்திற்கு தமிழக அரசு ஆணையிட்டது. ஆனால் மத்திய அரசு 3 லட்சம் தடுப்பூசிகளை மட்டும் அனுப்பியிருந்தது. கொரோனா தடுப்பூசிகள் போதுமானதாக இல்லாததால் 18 வயதுக்கு மேற்பட்டோர்க்கு தடுப்பூசி அளிப்பது காலதாமதமாகிறது என தமிழக அரசு கூறுகிறது. அதனால் தமிழகத்திற்கு 2 வாரங்களில் 7.33 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பப்படும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்