தமிழகத்தில் ஆக.12ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரங்கள் இதோ!
தமிழகத்தில் வருகிற (ஆக.8) அன்று வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவும் வண்ணம் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. இதை குறித்த தகவல்களை அம்மாவட்ட ஆட்சியர் கார்மேகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வேலைவாய்ப்பு முகாம்
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களது தலைமையில் ஒவ்வொரு மாதமும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். அதன் மூலம் வேலைவாய்ப்பில்லாத இளைஞர்கள் மற்றும் பெண்களில் பலரும் பயனடைந்துள்ளனர். அந்த வரிசையில் சேலம் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் வேலைவாய்ப்பு முகாமானது தவறாது நடைபெறும். இந்நிலையில் இந்த மாதத்திற்கான (ஆகஸ்ட் ) முகாம் வருகிற 12 ஆம் தேதி தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
SSLV விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் “தரவு இழப்பு” – முக்கிய தகவல் வெளியீடு!
மேலும், தனியார் நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக இந்த முகாமில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். குறிப்பாக உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் போன்ற முக்கிய துறைகளை சேர்ந்த சேலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
Exams Daily Mobile App Download
கல்வித்தகுதி:
8, 10 மற்றும் 12ம் வகுப்பு
ஐ.டி.ஐ
டிப்ளமோ
பட்டப்படிப்பு
பொறியியல்
செவிலியர்
ஆசிரியர்
தொழிற்கல்வி
தேதி விவரம்: ஆகஸ்ட் 12, 2022
இடம்: தொழில் நெறி வழிகாட்டும் மையம்
மேலும், இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடைய விரும்புபவர்களும், வேலையளிக்கும் நிறுவனங்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்யுமாறு மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.