Bigg Boss Ultimate Promo – வனிதா & சுரேஷ் சர்க்கரவர்த்திக்கு இடையில் முற்றிய வாக்குவாதம்! சினேகன் வெளிநடப்பு!
தற்போது டிஸ்னி + ஹாட்ஸ்டார் செயலியில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டு வர, வனிதா மற்றும் சுரேஷ் சக்கரவர்த்திக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
பிக் பாஸ் அல்டிமேட்
இதுவரை இல்லாததொரு புதிய முயற்சியாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் OTT தளத்தில் ‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சி தமிழ் மொழியில் தொடர்ச்சியாக 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. விஜய் டிவியில் சுமார் 5 சீசன்களாக ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் 14 போட்டியாளர்களுடன் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியானது 70 நாட்களுக்கு, தினமும் 24 மணி நேரமும் மக்கள் கண்டு களிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் சரவண விக்ரம் & ஐஸ்வர்யா விஜே தீபிகா நிஜ காதலர்களா? ரசிகர்கள் அதிர்ச்சி!
இப்போது இந்த நிகழ்ச்சி துவங்கி இன்றுடன் 3 நாட்கள் கடந்திருக்கும் நிலையில், ஆரம்பம் முதலே ‘பிக் பாஸ்’ அல்டிமேட் வீடு கலவரமாக காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் முன்னாள் சீசன்களில் கலந்து கொண்ட வனிதா, பாலாஜி, சுரேஷ் சக்கரவர்த்தி, நிரூப் ஆகியோர் இந்த அல்டிமேட் ஷோவில் கலந்து கொண்டு வர நிகழ்ச்சி மொத்தமும் சண்டை, பிரச்சனைகள் என நகர்ந்து கொண்டிருக்கிறது. அதுவும் இந்த ‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சி எவ்வித எடிட்டுகளும் இல்லாமல் ஒளிபரப்பாவதால் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறது.
அந்த வகையில் நிகழ்ச்சி துவங்கிய முதல் நாளிலேயே பாலாஜி ரூல்ஸை மீறுவது, அபிராமி புகைபிடித்தது, கெட்ட வார்த்தைகள், முகம் சுளிக்க வைக்கும் டாஸ்குகள், அபிராமி – நிரூப் காதல், வனிதாவின் பேச்சு போன்ற பல விஷயங்கள் மக்களிடையே பேசும் பொருளாக மாறி இருக்கிறது. இப்படி இருக்க தற்போது ‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கும் நிலையில், அதில் வனிதா மற்றும் சுரேஷ் ஆகியோருக்கு இடையில் ஒரு பெரிய பிரளயமே வெடித்திருக்கிறது.
அதாவது, ‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் டாஸ்காக பிரஸ் மீட் வைத்து, ஒவ்வொரு போட்டியாளர்களையும் ஸ்டார் ஆக பாவித்து மற்றவர்கள் கேள்வி கேட்கின்றனர். அந்த வகையில், தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் டாஸ்கில், கீழே அமர்ந்திருக்கும் சுரேஷை பார்த்து நீங்கள் இந்த பிரஸ் மீட்டில் என்ன செய்கிறீர்கள் என்று வனிதா கேட்க நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதை தான் நானும் செய்கிறேன் என்று அவர் பதில் கூறுகிறார். தொடர்நது ஏன் மரியாதையை குறைவாக பேசுகிறீர்கள் என்று வனிதா கேட்க, நீங்கள் தான் அப்படி நடந்து கொள்கிறீர்கள்.
இது போல ஒரு ஸ்டாரை பார்த்து பிரஸ் மீட்டில் கேள்வி கேட்டால் பிரச்சனை நடக்கும் என்று கோபப்படுகிறார் சுரேஷ். தொடர்ந்து வாக்குவாதம் முற்ற மற்றவர்களை பேச வேண்டாம் என்று சொல்வதற்கு உனக்கு எந்தவொரு தகுதியும் இல்லை என்று சுரேஷ் கத்துகிறார். இதை கேட்டுக்கொண்டிருந்த சினேகன் அங்கிருந்து வெளிநடப்பு செய்வது போல அந்த ப்ரோமோ முடிவுற்றிருக்கிறது. ஏற்கனவே சுரேஷ் மற்றும் வனிதா இருவரும் நிறுத்தாமல் பேசக்கூடியவர்கள் என்பதால், இந்த பிரச்சனை மூலம் ‘பிக் பாஸ்’ அல்டிமேட் வீடு கலவர பூமியாக மாறி இருக்கிறது.