Vijay TV Bigg Boss 5 Promo | ‘இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி என் வாழ்க்கை’ – மனம் திறந்த ராஜு!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் இறுதி வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போட்டியாளர்களுக்கு கோல்டன் மைக் கொடுக்கப்பட்டு பேச வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் ப்ரோமோ:
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த வாரம் முடிவில் 5வது சீசனுக்கான டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்து விடும். இறுதி சுற்றில் பிரியங்கா, ராஜு, பாவ்னி, அமீர், நிரூப் ஆகியோர் இருக்கின்றனர். மக்களின் வாக்குகள் அடிப்படையில் டைட்டில் வின்னர் தேர்வு செய்யப்படுவார். மேலும் சென்ற வாரம் தாமரை செல்வி வெளியேற்றப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. அடுத்ததாக இறுதி வாரம் இன்று தொடங்கி இருக்கிறது.
அதில் போட்டியாளர்களுக்கு கோல்டன் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் அதில் நிகழ்ச்சியில் எதற்காக வந்திருக்கிறார்கள் என்பது பற்றி பேச வேண்டும். அப்போது பேசிய ராஜு கூறுகையில் நான் சினிமாவில் பிரபலமாக வேண்டும் என பல வாய்ப்புகளை தேடி அலைந்தேன். அதற்காக தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். அடுத்தவர்கள் சந்தோசமாக இருந்தால் நமக்கு மகிழ்ச்சி தான என ராஜு சொல்லி இருக்கிறார்.
பெண் குழந்தைக்கு தாயான ஜீ தமிழ் ‘என்றென்றும் புன்னகை’ சீரியல் நடிகை – குவியும் வாழ்த்துக்கள்!
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி எனக்கு வாழ்க்கையாக மாற போகிறது என நினைக்கிறேன். உங்களது வீட்டில் ஒருவராக நான் இருக்க வேண்டும், உங்களது அண்ணன் தம்பி போல என்னை நீங்க நினைத்தாலே எனக்கு சந்தோசம் என அவர் சொல்லி இருக்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது. ரசிகர்கள் இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்கள் எப்படி சுவாரஸ்யமாக கொண்டு செல்ல இருக்கிறார்கள் என எதிர்பார்த்து இருக்கின்றனர்.