விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 டைட்டில் வின்னர் அறிவிப்பு எப்போது? வெளியான தகவல்!
மக்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க நேற்று (அக்.3) முதல் மீண்டுமாக துவங்கியுள்ள பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிவடைய அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை ஆகலாம் என சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் ஷோ
விஜய் டிவியில் நேற்று முதல் மிகவும் பிரமாண்டமாக துவங்கியுள்ள பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது 18 போட்டியாளர்களுடன் களம் கண்டு வருகிறது. வழக்கமாக 15 போட்டியாளர்களை உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சி கடந்த சில சீசன்களாக 18 போட்டியாளர்களுடன் பயணித்து வருகிறது. குறிப்பாக முன் சீசனில் செய்த சொதப்பல்களை கவனமாக கையாண்ட நிகழ்ச்சி குழுவினர், நாட்டுப்புற கலைஞர், பாடகர்கள், சினிமா நடிகர்கள் என மக்களை கவரும் வண்ணம் சில தெரிந்த மற்றும் தெரியாத முகங்களுடன் இந்த ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சிகளை துவங்கியுள்ளனர்.
ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியல் குழு கொடுத்த ஹாப்பி நியூஸ் – குஷியில் ரசிகர்கள்!
அந்த வகையில் 7 ஆண்கள், 11 பெண்களுடன் தற்போது பிக்பாஸ் சீசன் 5 களைகட்ட துவங்கியுள்ளது. பிக்பாஸ் துவங்கிய நேற்று, புதிய நாளானதால் போட்டியாளர்கள் அனைவரும் ஒன்று போல சுற்றித்திரிந்தனர். ஆரம்பத்தில் இப்படி தான் இருக்கும், போகப்போக ஒவ்வொருவரது உண்மை முகங்கள் வெளியே வரும் என நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகர் கமல்ஹாசனும் குறிப்பிட்டிருந்தார். மேலும் வழக்கத்தை விட சற்று வித்தியாசமான அலங்காரத்துடன் இந்த முறை பிக்பாஸ் வீடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சீசன் துவங்கிய முதல் நாளான இன்று இதுவரை 3 ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளது.
அதில் பொழுதுபோக்குக்கு கொஞ்சமும் பஞ்சம் இருக்காது என தெரிகிறது. என்றாலும் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிவடையும் நாள் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது ஆண்டு தோறும் ஜூன் மாதத்தில் துவங்கும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கொரோனா 2ம் அலை காரணமாக இம்மாதம் மிகவும் தாமதமாக துவங்கியுள்ளது. அதன் அடிப்படையில் காண்கையில் பிக்பாஸ் சீசன் 5 அடுத்த ஆண்டு ஜனவரி 16ம் தேதியுடன் முடிவடைவதாக சில தகவல்கள் கிடைத்துள்ளது.