கமல்ஹாசனுக்கு பதிலாக ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகும் பிரபலம் – ரசிகர்கள் ஷாக்!
விஜய் தொலைக்காட்சியில் தற்போது பல வித திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியினை இந்த முறை யார் தொகுக்க இருக்கிறார்கள் என்ற செய்தி வெளியாகி உள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
பிக் பாஸ் நிகழ்ச்சி
கடந்த 4 வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி தான், பிக் பாஸ். பிரபலங்கள் பலரும் ஒரே வீட்டில் 100 நாட்கள் இருக்க வேண்டும், அவர்களில் யார் பிக் பாஸ் கொடுக்கும் டாஸ்குகளை சரி வர செய்து ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரினை எடுக்கிறார்களோ அவர்களே பிக் பாஸ் வெற்றியாளர். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. 17 போட்டியாளர்கள் இந்த முறை உள்ளே நுழைந்த நிலையில் தற்போது 2 வைல்ட் கார்டு என்ட்ரி போட்டியாளர்களுடன் 15 பேர் இந்த போட்டியில் விளையாடி வருகின்றனர்.
“கோபியை பார்த்தா அப்படியே கோவமா பத்திகிட்டு வருது” பாக்கியலட்சுமி முதல் ரோஜா வரை – டாப் கமெண்ட்ஸ்!
50 நாட்களை கடந்துள்ள நிலையில் தற்போது தான் போட்டி சூடுபிடிக்க துவங்கி உள்ளது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். நேற்று முன்தினம் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் அமெரிக்கா சென்று வந்ததில் இருந்து தனக்கு இருமல் இருந்ததாகவும், தனக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் பாசிட்டிவ் என்று வந்து விட்டது என்று தெரிவித்து இருந்தார். இதன் காரணமாக தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டதாகவும் தெரிவித்து இருந்தார்.
இப்படியான நிலையில், இந்த வாரம் சனி மற்றும் ஞாயிறு நிகழ்ச்சியினை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி ரசிகர் மத்தியில் எழுந்துள்ளது. அது குறித்த லேட்டஸ்ட் தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அது என்னவென்றால், இந்த வார நிகழ்ச்சிகளை கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்க வாய்ப்புகள் இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே ஸ்ருதிஹாசன் ஒரு முறை இறுதி பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் தொடரும் அக்ஷரா, சிபியின் மோதல் – விறுவிறுப்பாக வெளியான 2வது ப்ரோமோ!
அப்படி அவர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கவில்லை என்றால், நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவார் என்று கூறப்படுகிறது. போட்டியாளர்களிடம் சரமாரியாக கேள்விகளை கேட்க நடிகை ரம்யா கிருஷ்ணன் சரியான தேர்வாக இருப்பார் என்று கூறப்படுகிறது. இதே போல, தெலுங்கில் நடிகர் நாகா அர்ஜுனா படப்பிடிப்பு காரணமாக வர முடியாத நிலை ஏற்பட்ட போது அவரது மருமகளாக இருந்த நடிகை சமந்தா தொகுத்து வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.