‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் தொடரும் அக்ஷரா, சிபியின் மோதல் – விறுவிறுப்பாக வெளியான 2வது ப்ரோமோ!
விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் பள்ளிக்கு செல்லும் டாஸ்கில் போட்டியாளர்கள் அக்ஷரா மற்றும் சிபிக்கு இடையே மீண்டுமாக பிரச்சனைகள் எழுந்துள்ளது. இம்முறை இந்த பிரச்சனையில் ராஜுவும் சிக்கி இருப்பது போல ப்ரோமோ ஒன்று தற்சமயம் வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் ப்ரோமோ
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான ‘பிக்பாஸ்’ சீசன் 5, ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய சண்டைகளுடன் வலம் வந்து கொண்டிருக்கிறது. பொதுவாக ஒருவரது கருத்துக்கள் மற்றவர்களுக்கு பிரச்சனையை உண்டாக்குவதால் மட்டுமே ‘பிக்பாஸ்’ போட்டியாளர்களுக்குள் சண்டை உருவாகும். ஆனால் இந்த ‘பிக்பாஸ்’ சீசன் 5ல் போட்டியாளர்களுக்கு டாஸ்க் செய்வதே பெரும் சவாலாக இருந்து வருகிறது. அந்த வகையில் பிக்பாஸ் கொடுக்கும் ஒவ்வொரு டாஸ்கையும் தனிப்பட்ட விதத்தில் எடுத்துக்கொண்டு மற்றவர்களுடன் சண்டை போடுவது இந்த சீஸனின் போட்டியாளர்களுக்கு வழக்கமாகி இருக்கிறது.
சீரியல் நடிகை ரேஷ்மா, மதன் ஜோடிக்கு திருமண வாழ்த்து சொன்ன பிரபல நடிகர் – ரசிகர்கள் உற்சாகம்!
கஷ்டமான டாஸ்குகளில் தான் இது போன்ற பிரச்சனைகள் எழுகிறதென்றால், மீண்டும் பள்ளிக்கு போகலாம் என்கிற கலகலப்பான டாஸ்கையும் போட்டியாளர்கள் சண்டை போட்டு துவம்சம் செய்து வருகின்றனர். என்றாலும் சிலர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரமாகவே மாறி டாஸ்குகளை நிறைவேற்ற, மற்றவர்களுக்கு அதுவும் பிரச்சனையாக இருந்து வருகிறது. அதே போல இன்றைய நாளுக்கான பள்ளிக்கூட டாஸ்கின் போது, அக்ஷரா, சிபியிடம் பெர்மிஷன் கேட்டுவிட்டு துணிகளை உலர வைக்க செல்கிறார்.
ஆனால், வேலையை முடித்து விட்டு வேகமாக வர சொல்ல சிபியிடம் கத்துகிறார் அக்ஷரா. தொடர்ந்து கோபத்தில் இருக்கும் அக்ஷராவிடம், முடியும் என சொல்லிவிட்டு இப்படி செய்வது நன்றாக இல்லை என அபிநய் பேச நான் எப்போது முடியும் என்று கூறினேன் அவர்களுக்கு அறிவே இல்லையா, ஸ்கூலில் இப்படி தான் செய்வார்களா என கத்துகிறார். இவரை தொடர்ந்து அக்ஷராவிடம் பேச வரும் சிபியை பார்த்து நீ பேசாத, கடுப்பாகி விடுவேன், என் முன்னாடியே வராத என கோபத்தில் கொந்தளிக்கிறார் அக்ஷரா.
கோதைக்கு உதவி செய்யும் பாக்கியா, விருந்து நடக்கும் அதிர்ச்சியில் லேகா – வெளியான மெகா சங்கமம் ப்ரோமோ!
அதே போல, அக்ஷராவை சமாதானம் செய்ய வரும் ராஜுவையும் நீ, அவன் எல்லாம் ஓவரா பண்றீங்க என சொல்ல ராஜுவை அங்கிருந்து அழைத்து செல்கிறார் சிபி. இதற்கு பிறகு அக்ஷராவிற்கு பிக்பாஸிடம் இருந்து அழைப்பு வர அவர் எழுந்து போகிறார். என்ன நடக்கிறது என்பதை சுதாரித்துக் கொள்வதற்குள் முடிந்து விடும் இந்த மொத்த ப்ரோமோவும் ஒரு குழாயடி சண்டை காட்சியை முன் நிறுத்துவது போல இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.