விஜய் டிவி ‘பிக்பாஸ்’ ஷோவில் திருமண வாழ்க்கை குறித்து பகிர்ந்து கொண்ட நடிகை பாவனி ரெட்டி – வெளியான ப்ரோமோ!
விஜய் டிவியின் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான 3வது ப்ரோமோ தற்சமயம் வெளியாகியுள்ளது. அதில் நடிகை பாவனி ரெட்டி தனது திருமணம், கணவரின் இறப்பு குறித்து அவர் கூறிய கருத்துக்கள் ரசிகர்களை சற்று வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிக்பாஸ் ப்ரோமோ
பொதுவாக ஒரு ரியாலிட்டி ஷோ ஆகட்டும், சீரியல்கள் ஆகட்டும் ரசிகர்களின் மனதை புரிந்து வைத்து கொண்டு அந்த வழியிலேயே நிகழ்ச்சிகளை நடத்தி செல்லும் ஒரு யுக்தியை விஜய் டிவி கடைபிடித்து வருகிறது. தற்போது இதே பாணியை தான் விஜய் டிவி, ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியிலும் உபயோகித்து வருகிறது. அதாவது ஒரு சீரியலில் சண்டை, மோதல், காதல் ஆகியவற்றின் கலவை, இசை நிகழ்ச்சியில் நகைச்சுவை, நடன நிகழ்ச்சியில் வழக்கமான பாணி என அனைத்தையும் மாற்றி ரசிகர்களை கவரும் வண்ணம் ஒரு புதிய வடிவில் ஒவ்வொன்றும் அமைக்கப்பட்டிருக்கும்.
நயன்தாரா படத்தில் ஹீரோ ஆன விஜய் டிவி ‘பிக் பாஸ்’ கவின் – ரசிகர்கள் வாழ்த்து!
இது அத்தனையும் அடங்கிய, அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கக்கூடிய வகையில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய சீசனுக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் ‘பிக்பாஸ்’ சீசன் 5, ஆரம்பமே அமர்க்களமாக துவங்கி இருக்கிறது. அதாவது இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான ப்ரோமோவில், போட்டியாளர்கள் கண்ணீர், கவலையுடன் தங்களது கடந்த கால வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள அது பார்வையாளர்களின் கவனம் ஈர்த்துள்ளது.
விஜய் டிவி ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ அறந்தாங்கி நிஷாவின் புதிய கெட்டப் – ரசிகர்கள் வாழ்த்து!
இதனையடுத்து தற்போது வெளியாகி இருக்கும் பிக்பாஸ் ஷோவின் 3வது ப்ரோமோவில், நடிகை பாவனி ரெட்டி தனது திருமண வாழ்க்கை குறித்து மற்றொரு போட்டியாளரான இசைவாணியுடன் பகிர்ந்துள்ளார். அதாவது, தனக்கு திருமணமாகி சில மாதங்கள் கழித்து கணவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், அது ஏன் நடந்தது என்று தனக்கு தானே யோசித்து கொண்டதாகவும் பாவனி ரெட்டி கூறியுள்ளார். அவரது இந்த பதிவு, ரசிகர்களை சற்றே வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.