வீட்டிலிருந்தே மாதம் ரூ.60,000 வரை சம்பாரிக்கலாம் – ஸ்டேட் வங்கி அறிவிப்பு!
பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி வீட்டிலிருந்தபடியே மாதம் 60,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் வகையில் அருமையான வாய்ப்பை வழங்குகிறது. இதனை தொடங்க பல நிபந்தனைகள் உள்ளது அவற்றை இப்பதிவில் காண்போம்.
எஸ்பிஐ ஏடிஎம்:
இந்தியாவில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு கொரோனா ஊரடங்கு காலத்திலும் தடையின்றி சேவைகளை வழங்கியது. கொரோனா சிகிச்சைக்காக 8.5 சதவீத வட்டியில் 5 லட்சம் வரை கடன் வழங்கியது. ஒரு சொந்த வீட்டை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சிறந்த சலுகையாக செயலாக்க கட்டணம் இன்றி வீட்டு கடன் வழங்கியது. எஸ்பிஐ யோனோ ஆப் மூலம் பல்வேறு பணிகளை வீட்டில் இருந்து எளிதாக செய்யும் வாய்ப்பை வழங்கியது.
தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை, மீறினால் நடவடிக்கை – உள்ளாட்சி தேர்தல் எதிரொலி!
கிரெடிட் கார்டு, காப்பீடு திட்டங்கள், ரயில் டிக்கெட் புக் செய்தல் போன்ற வேலைகளை இந்த செயலி மூலம் செய்யலாம்.மேலும் இது போன்ற பல வசதிகள் எஸ்பிஐ யோனோ செயலியில் உள்ளது. டெபிட் கார்டு மூலமாக 8000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்று அதற்கு டெபிட் கார்டு மூலமாகவே ஈ.எம்.ஐ கட்டும் புதிய வசதியும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது எஸ்பிஐ வங்கியின் ஏ.டி.ஏம் நிறுவுவதன் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது. ஏடிஎம் மையங்கள் நிறுவுவதை வெளி நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் விட்டுள்ளது. அதன் படி நீங்கள் ஏடிஎம்-ஐ வாடகைக்கு நிறுவினால் அதன் மூலம் பணம் ஈட்ட முடியும். இதற்கு பல நிபந்தனைகளும் உள்ளது.
- SBI ATM அமைக்க விரும்புபவர்கள் 50 முதல் 80 சதுர அடி வைத்திருக்க வேண்டும்.
- அந்த இடமானது மற்ற வங்கி ஏடிஎம்மில் இருந்து 100 மீட்டர் இடைவெளியில் இருக்க வேண்டும்.
- நீங்கள் வைத்திருக்கும் இடம் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு தெரியுமாறு இருக்க வேண்டும்.
- மேலும் உங்கள் இடத்தில் 24 மணி நேரமும் மின்சார வசதி இருக்க வேண்டும். மேலும் கான்கிரீட் கூரை இருக்க வேண்டும்.
- உங்கள் இடத்தில் நிறுவப்பட்ட ஏடிஎம்மில் நடைபெறும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் உங்களுக்கு கமிஷன் கிடைக்கும். இதன் மூலம் நீங்கள் ஒரு மாதத்திற்கு ரூ.60,000 க்கு மேல் சம்பாரிக்கலாம்.
Hai sir I have place for ATM pls tell the contact person
I have room for atm please share the details