தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை, மீறினால் நடவடிக்கை – உள்ளாட்சி தேர்தல் எதிரொலி!
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கும் மாவட்டங்களில் அரசு பொது விடுமுறை அளித்துள்ள நிலையில், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலாளர் துறை அறிவுறுத்தியுள்ளது. இதனை மீறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதியத்துடன் விடுமுறை:
தமிழகத்தில் வரும் அக்.6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. தமிழக மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலுக்கான விதிமுறைகளை அறிவித்துள்ளது. தேர்தல் நாளை முன்னிட்டு உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கும் 9 மாவட்டங்களுக்கும் தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்து ஆணை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் விடுமுறை நாளில் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலாளர் துறை அறிவித்துள்ளது.
OLA Electric Scooter ரூ.499க்கு முன்பதிவு மீண்டும் தொடக்கம் – புதிய அம்சங்கள் & விலை நிலவரம்!
இது குறித்த அறிவிப்பில், தொழிலாளர் துறை உதவி ஆணையர் ஜெய்சங்கர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அனைவரும் வாக்களிக்க எதுவாக தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் உள்ள தொழில் நிறுவனங்கள், உணவகங்கள், உணவு நிறுவனங்கள், தொழில் கூடங்கள், அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவைகளில் பணியாற்றும் பணியாளர்கள், தற்காலிக, ஒப்பந்த, தினக்கூலி ஊழியர்கள் என அனைத்து தொழிலாளர்களுக்கும் அன்றைய தினத்திற்கான ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். இந்த விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தியாவில் 20 லட்சம் WhatsApp கணக்குகள் முடக்கம் – அறிக்கையில் ஷாக் தகவல்!
இதனை கண்காணிக்க தொழிலாளர் துறை உதவி ஆணையர் தலைமையில் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு சோதிக்கப்படும். மேலும், வாக்களிக்க விடுமுறை அளிக்காத நிறுவனங்களை பற்றி இந்த குழுவினரிடம் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர் ராமு (8825671449) , முத்திரை ஆய்வாளர் (9487137960) , மேற்பார்வையாளர் பத்மா (04146226324) மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொழிலாளர் உதவி ஆய்வாளர் கருணாநிதி (6380819227), உதவி ஆய்வாளர் அரியமுத்து (9861097299), முத்திரை ஆய்வாளர் சிவக்குமார் (8778292311) இவர்களை தொடர்பு கொண்டு புகார்களை அறிவிக்கலாம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.