இந்தியாவில் 20 லட்சம் WhatsApp கணக்குகள் முடக்கம் – அறிக்கையில் ஷாக் தகவல்!
வாட்ஸ்அப் நிறுவனம், ஆகஸ்ட் மாதத்தில் 2 மில்லியன் கணக்குகளை முடக்கியிருப்பதாக தெரிவித்துள்ளது. இதுவரை தடை செய்யப்பட்ட கணக்குகளில் 25 % கணக்குகள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறியுள்ளது.
வாட்ஸ்அப் அக்கவுண்ட்:
முன்னணி மெசஞ்சர் நிறுவனமான வாட்ஸ்அப் தங்கள் பயனாளர்களுக்கு அவ்வபோது புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. சமீபத்தில் வாட்ஸ் அப் தங்கள் பயனர்களின் டேட்டாக்களை கையாளும் விதம் குறித்து வெளியிட்ட அறிவிப்புகள் பயனர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அதிருப்தி அடைந்த பயனாளர்கள் டெலிகிராம் செயலி நோக்கி சென்றனர். மீண்டும் பயனாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது பயனுள்ள அம்சங்களை கொண்டு வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – தீபாவளி போனஸுடன், 18 மாத நிலுவை DA!
இந்த நிலையில் இந்தியாவில் புதிய தொழில்நுட்ப விதிகளை மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்தியது. இந்த விதிகளை சமூக வலைதள நிறுவனங்கள் இந்த விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு ஆணையிட்டது. அதன்படி வாட்ஸ் அப் யூசர்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் வெளிப்படைத்தன்மை அறிக்கையாக வாட்ஸ் அப் நிறுவனம், மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. மத்திய அரசு அமல்படுத்திய புதிய தொழில்நுட்ப விதிகளுக்குப் பிறகு வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிடும் 3வது அறிக்கை இதுவாகும்.
இயற்பியலுக்கான நோபல் பரிசு 2021 மூவருக்கு பகிர்ந்தளிப்பு – அதிகாரபூர்வ அறிவிப்பு!
அதில் விதிகளை மீறிய, சட்டவிரோத கன்டென்டுகளை கொண்ட 20,70,000 வாட்ஸ் அப் கணக்குகளை முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 420 புகார்கள் பெறப்பட்டதாக தெரிவித்துள்ள வாட்ஸ்அப் நிறுவனம் உலக அளவில் இதுவரை தடை செய்யப்பட்ட கணக்குகளில் 25 விழுக்காடு கணக்குகள் இந்தியாவைச் சேர்ந்தது என்றும் குறிப்பித்தக்கது. இதற்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளில், மே 15 முதல் ஜூன் 15 வரை 20 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.