Vijay TV Bigg Boss 5 Promo | வீட்டை விட்டு வெளியே போகாமல் அடம் பிடிக்கும் தாமரை! ரசிகர்கள் ஷாக்!
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில், பணத்தை எடுத்துக் கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறுவார் என மக்கள் எதிர்பார்த்து இருக்கும் நிலையில் தற்போது புதிதாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் ப்ரோமோ:
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தற்போது 7 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். அவர்களில் மக்கள் மனம் கவர்ந்த ஒருவர் மட்டுமே பிக் பாஸ் டைட்டில் வெல்வார். இந்நிலையில் இந்த வாரம் அனைவரும் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் மக்களின் குறைவான வாக்குகள் பெற்று வெளியேற இருப்பது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை – நிதி அமைச்சர் அறிவிப்பு!
அது ஒரு புறம் இருக்க நேற்றைய எபிசோடில் போட்டியாளர்களுக்கு நடிகர் சரத்குமார் பணப்பெட்டியை கொடுத்தார். அதில் 3 லட்ச ரூபாய் இருந்தது. இந்த தொகையை யாராவது எடுக்கும் வரை அதிகமாகும் என சரத்குமார் சொன்னார். மேலும் போட்டி என்று வந்தால் அதில் வெற்றி தோல்வி இருக்கும், அதனால் போட்டியாளர்கள் சீக்கரம் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என சொல்லி கிளம்பி விட்டார். முதல் ப்ரோமோவில் 15 லட்ச ரூபாய் கொடுத்தால் நான் எடுப்பேன் என பாவ்னி சொல்கிறார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பகுதி நேர ஊரடங்கு அமல்? முதல்வர் தீவிர ஆலோசனை!
இரண்டாவது ப்ரோமோவில் 6 லட்சம் வைக்கப்பட்டுள்ளது. அதை சுற்றி வரும் நிரூப் தாமரையிடம் எவ்வளவு கொடுத்தாலும் நீ எடுக்காதே என சொல்கிறார். நான் எடுக்கவே மாட்டேன் என தாமரை சொல்ல, இதுவும் விளையாட்டு என சொல்லி நீயும் எடுத்து விடாதே அப்பறம் நான் தனியாக இருப்பேன் என தாமரை சொல்ல, உனக்கு கடன் பிரச்சனை இருக்கு என்று சொன்னாய் எடுக்க வேண்டியது தான என நிரூப் கேட்கிறார். மேலும் சம்பாரிக்க முடியும் என தைரியம் வந்த பின் எதற்கு எடுக்க போகிறேன் கோடிக்கணக்கில் வைத்தால் கூட நான் எடுக்க மாட்டேன் என தாமரை சொல்கிறார்.