‘பிக் பாஸ்’ போட்டியாளர்கள் பற்றி புட்டு புட்டு வைத்த வைல்ட் கார்டு என்ட்ரி சஞ்சீவ் – ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியின் எட்டாவது வாரத்தில் மூன்றாவது வைல்ட் கார்ட் என்ட்ரியாக நடிகர் சஞ்சீவ் களமிறங்கி இருக்கிறார். அவர் போட்டியாளர்கள் பற்றி சொல்லும் மூன்றாவது ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் ப்ரோமோ:
“பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது 50 நாட்களுக்கு மேல் ஆகிறது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 7 பேர் வெளியேறி இருக்கின்றனர். மேலும் இந்த வாரம் 3 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டிற்குள் வந்துள்ளனர். அதில் ஏற்கனவே மூன்றாவது வாரத்தில் வெளியேறிய அபிஷேக் ராஜா மற்றும் புதிதாக நடன இயக்குனர் அமீர் வீட்டிற்குள் வந்துள்ளனர். இன்றைய எபிசோடில் மேலும் ஒரு வைல்ட் கார்ட் என்ட்ரியாக நடிகர் சஞ்சீவ் வந்துள்ளார்.
வயதான பாட்டி போல மாறிய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தனம் – ரசிகர்கள் அதிர்ச்சி!
அவர் வீட்டிற்குள் வந்ததும் போட்டியாளர்கள் பற்றி கருத்து சொல்லி இருக்கிறார். அதில் வருண் பற்றி சொன்ன அவர், முதல் மூன்று வாரங்களில் இவர் சத்தம் வெளியே கேட்காமல் இருந்தது. அதன் பின் அவர் நன்றாக பேச தொடங்கி விட்டார். அது வெளியே இருந்து பார்க்க நன்றாக இருக்கிறது என சொல்லி இருக்கிறார். அதன் பின் அக்ஷரா பற்றி பேசிய அவர் நீங்க எப்போ எப்படி இருக்கீங்க என தெரியவில்லை என சொல்கிறார். உங்களை பார்த்தால் என்னை பார்ப்பது போலவே இருக்கிறது என கூறுகிறார்.
கொரோனா பாதித்த பிரபல நடன இயக்குனர் கவலைக்கிடம் – மருத்துவ செலவுக்கு பணமின்றி தவிக்கும் குடும்பம்!
பின் பிரியங்கா பற்றி அவர் பேச நல்லவருக்கு நல்லவள், சண்டைனு வந்தா மோதி பார்ப்போமா என சொல்வது போல இருக்கிறார். கடைசியாக ராஜு பற்றி சொல்ல வருகிறார். இவர் விளையாட்டை ராஜு ஒரு அழகான மீட்டர் மூலமாக விளையாடி வருகிறார். ஆனால் அந்த மீட்டர் சூடுபிடித்தால் வேகமாக ஓடும் அல்லவா அது போல ஒருநாள் மீட்டருக்கு சூடுபிடிக்கும் அது வேகமாக ஓடும் என சொல்ல ராஜு உண்மையை அப்படியே சொல்கிறாரே என்பது போல ஒரு ரியாக்சன் கொடுக்கிறார்.