தமிழ் மொழியை தரக்குறைவாக பேசிய பிக்பாஸ் அக்ஷரா – சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பிய ப்ரோமோ!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது 70 நாட்களை நெருங்கி உள்ள நிலையில், நேற்றைய எபிசோடில் அக்ஷரா தமிழ் மொழியை தவறாக பேசியது குறித்த ப்ரோமோ சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி:
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சீசன்களை போல இல்லாமல் இந்த சீசனில் எல்லாம் மாறி இருக்கிறது. அதை கமல்ஹாசன் கூட கடந்த எபிசோடில் சொல்லி இருந்தார். இந்த நிகழ்ச்சி தமிழ் சின்னத்திரையில் இது வரை ஒளிபரப்பான ரியாலிட்டி நிகழ்ச்சி போல இல்லாமல் புதுமையான ஒன்றாக இருக்கிறது. அதனால் மக்களின் ஆதரவை அதிகம் பெற்றுள்ளது. 18 போட்டியாளர்கள் வீட்டிற்குள் அனுப்பப்பட அவர்களில் ஒவ்வொருவராக வாரந்தோறும் மக்களின் வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்படுவார்கள்.
இதுவரை இந்த சீசனில் அவ்வாறு வெளியேறி தற்போது 11 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். அவர்களில் ஆண், பெண் என வித்தியாசம் இல்லாமல் உடல் வலிமை சம்மந்தமான போட்டியில் கூட போட்டி போட்டு விளையாடி வருகின்றனர். அதனால் மக்களுக்கு பிக்பாஸ் பார்க்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. மேலும் கடந்த சீசன்கள் போல இல்லாமல் கமல்ஹாசன் போட்டியாளர்களை சரமாறி கேள்விகளை கேட்டு வருகிறார். அதனால் வார இறுதி எபிசோடுகளுக்கும் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.
Vijay TV Bigg Boss 5 Promo | கடுமையாகும் டாஸ்குகள்! நாமினேஷனில் இருந்து தப்பிக்க போவது யார்?
நேற்றைய எபிசோடில் போட்டி நடைபெறும் போது அக்ஷரா பிரியங்கா இடையே வாக்குவாதம் நடைபெற்றது. கோவப்பட்ட பிரியங்கா அக்ஷராவை பயங்கரமாக திட்டினார். பதிலுக்கு அக்ஷராவும் பேச வாக்குவாதம் முற்றியது. அப்போது அக்ஷரா ஆங்கிலத்தில் திட்ட பிரியங்கா தமிழில் பேச சொல்கிறார். அதற்கு தமிழை பற்றி தரக்குறைவான வார்த்தை ஒன்றை அக்ஷரா உபயோகப்படுத்தி இருக்கிறார். அந்த ப்ரோமோ சமூகவலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.