நிச்சயத்தை நிறுத்த வெண்பா சொன்ன காரணம் – “பாரதி கண்ணம்மா” சீரியல் திருப்பங்கள்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பா ரோஹித் நிச்சயதார்த்தம் நடைபெற இருக்கும் நிலையில் வெண்பா புதிதாக ஒரு காரணத்தை சொல்லி அதை நிறுத்த நினைக்கிறார். ஆனால் சௌந்தர்யா குறுக்கே வந்து பெரிய திருப்பத்தை கொண்டு வருகிறார்.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியலில், பாரதியும் கண்ணம்மாவும் சேர்வார்களா என்ற உண்மையை தாண்டி லக்ஷ்மிக்கு எல்லா உண்மையும் தெரியும் என்ற உண்மை பாரதிக்கு தெரிய வருகிறது. அதனால் பாரதி ஹேமாவுடன் விலகியே இருக்கிறார். மறுபக்கம் பாரதியின் அப்பாவிற்கு கேன்சர் இருக்கிறது என்ற உண்மை தெரிய வருகிறது. ஆனால் அவர் அது பற்றி வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருக்கிறார். இது ஒரு புறம் இருக்க வெண்பா ரோஹித் திருமண ஏற்பாடுகளை ஷர்மிளா செய்கிறார்.
வெண்பாவிற்கும் ரோஹித்திற்கும் நிச்சயதார்த்தம் நடைபெற ஏற்பாடுகள் நடக்கிறது. அதில் பாரதி குடும்பத்தில் இருந்து அனைவரும் வந்திருக்கின்றனர். அது மட்டுமில்லாமல் கண்ணம்மாவும் லக்ஷ்மியும் கூட வெண்பாவின் நிச்சயத்திற்கு வந்திருக்கின்றனர். ஆனால் வெண்பா எப்படியாவது இந்த நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் என யோசித்துக் கொண்டே இருக்கிறார். இந்நிலையில் அவர் இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என சொல்ல ஷர்மிளா என்ன காரணம் என கேட்கிறார்.
Exams Daily Mobile App Download
அதற்கு வெண்பா இவனுடைய அம்மா அப்பாவே இவனை ஒதுக்கி வைத்து இருக்கிறார்கள். யாரும் இல்லாத அனாதையை நான் திருமணம் செய்து கொள்ள முடியாது. மேலும் இவனிடம் இப்போது பணம் கூட இல்லை ஒன்றுமில்லாதவனை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என சொல்ல, உடனே சௌந்தர்யா நான் ரோஹித்தை தத்து எடுக்கிறேன் அவன் இனிமேல் பாரதியின் அண்ணன் என சொல்கிறார். ஷர்மிளாவும் வெண்பாவை நிச்சயத்திற்கு ஒப்புக் கொள்ள சொல்ல, இருவருடைய நிச்சயதார்த்தம் நல்லபடியாக நடக்கிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்