ராதிகா எடுக்க போகும் அதிரடி முடிவு, கோபியின் நிலை என்ன? “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வரும் திருப்பம்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவிற்கு கோபி செய்த துரோகத்தை தாங்க முடியாமல் அவர் கோபியை பிரிய முடிவு செய்கிறார். இந்நிலையில் கோபி வீட்டை விட்டு வெளியேற ராதிகா கோபியை ஏற்றுக் கொள்வாரா என்பது அடுத்து வரப் போகும் பெரிய திருப்பமாக இருக்க போகிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் கோபியும் பாக்கியாவும் பல வாக்குவாதங்களுக்கு பின் பிரிந்துவிட்டனர். ஆனால் அதில் பெரிய திருப்பமாக பாக்கியா வீட்டை விட்டு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடக்காமல் கோபி வீட்டை விட்டு வெளியே செல்கிறார். ஆனால் அவர் போவதற்கு முன்னால் பாக்கியாவிடம் இந்த வீட்டில் இருக்க வேண்டும் என்றால் 40 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என சொல்கிறார். பாக்கியாவும் கோபியிடம் பணத்தை ஒரு வருடத்தில் கொடுத்து விடுகிறேன் என சவால் விடுகிறார்.
பாக்கியாவின் இந்த முடிவு ஈஸ்வரி மற்றும் இனியாவிற்கு பிடிக்காமல் இருக்கிறது. பாக்கியா எடுத்த முடிவு தவறானது என அவர்கள் பாக்கியா மீது கோவித்துக் கொள்கின்றனர். மறுபக்கம் கோபி பாக்கியா சவால் விட்டதை நினைத்து கோவமாக இருக்கிறார். இத்தனை ஆண்டுகள் குடும்பத்திற்காக உழைத்தது எல்லாம் வீணாகிவிட்டது என நினைத்து பயங்கர கோவத்தில் இருக்கிறார். அதன் பின் அவர் ராதிகாவை சந்திக்க செல்கிறார். ராதிகாவிடம் தான் வீட்டை விட்டு வந்ததாக சொல்கிறார்.
Exams Daily Mobile App Download
அதை கேட்டு ராதிகா வருத்தப்படுகிறார். உன்னுடன் வாழ வேண்டும் என்பதால் இத்தனை ஆண்டுகள் உழைத்து சம்பாரித்த வீட்டை விட்டு வந்து இப்போது நடு ரோட்டில் படுக்க கூட இடம் இல்லாமல் இருக்கிறேன் என கோபி சொல்ல, ராதிகாவுக்கு கோபி மீது அனுதாபம் வருகிறது. அதனால் ராதிகா மனம் மாறி கோபியை ஏற்றுக் கொள்வாரா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடில் பெரிய திருப்பமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்