பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணம் உயர்வு – மாணவர்கள் போராட்டம்.. அமைச்சர் சொன்ன ஹாப்பி நியூஸ்!
தமிழகத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தேர்வு கட்டணம்:
பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு மாணவர்கள் மத்தியில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இந்த தேர்வு கட்டண உயர்வை கண்டித்து மாணவர் சங்கம் சார்பில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். போராட்டம் குறித்து காவல் நிலையத்திற்கு புகார் அளித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்தனர். இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உயர்கல்வித்துறை கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
IRCTC-யில் ரூ.30,000/- மாத ஊதியத்தில் வேலை – நேர்காணல் மூலம் தேர்வு!
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் உயர்த்தப்படாது, பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான தேர்வு கட்டணத்தை நிர்ணயிக்க குழு அமைக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.