திரும்ப வந்தால் மகிழ்ச்சியான வாழ்வு.. இல்லையென்றால் சாவு தான் – பாரதி எடுக்கும் விபரீத முடிவு!
பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா தனது 2 மகள்களுடன் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், பாரதி ஹேமாவை பிரிந்து தவித்து வருவது போலவும் காட்சிகள் சென்று வருகின்றது.
DNA டெஸ்ட் ரிசல்ட்:
கிட்டத்தட்ட 10 வருடங்களாக கண்ணம்மா மீது தனது சந்தேக எண்ணத்தை மாற்றிக் கொள்ளாமல் இருந்த பாரதி, திடீரென்று ஹேமா மற்றும் லட்சுமி ஒரு வேளை தனது குழந்தையாக இருப்பார்களோ என்று யோசிக்கிறார். அப்போது வேணுவிற்கு உடல்நலம் சரியில்லாமல் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆக , இது தான் நல்ல சான்ஸ் எல்லாரும் வாங்க மெடிக்கல் செக் அப் பண்ணிக்கலாம் என்று ஹேமா மற்றும் லட்சுமி இருவருக்கும் DNA டெஸ்ட்க்கு தேவையான சோதனைகளை செய்து கொள்கிறார். டெல்லிக்கு தான் இந்த சோதனைகளை அனுப்ப வேண்டும். அங்கிருந்து தான் ரிப்போர்ட் வரும் என்று சொல்லி விடுகிறார்கள்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
எதிர்பாராத பல காரணங்களால் DNA டெஸ்ட் ரிசல்ட் வர அதிக தாமதம் ஆகிறது. இதற்கு நடுவில் அனைத்து உண்மைகளையும் கூறி கண்ணம்மா வந்து ஹேமாவை தன்னுடன் அழைத்து செல்கிறார். அப்போது பாரதி எதுவும் செய்ய முடியாமல் போகிறது. DNA டெஸ்ட் ரிப்போர்ட் வந்து விட்டால் எல்லா பிரச்சனையும் முடிந்து விடும் என்று பாரதி அமைதியாக இருக்கிறார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல பாரதி பொறுமையை இழந்து விடுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகும் மற்றொரு நாயகி? காரணம் இதுவா – ஷாக்கில் ரசிகர்கள்!
Exams Daily Mobile App Download
இதனால் நேரடியாக தானே டெல்லிக்கு சென்று DNA டெஸ்ட் ரிப்போர்டை வாங்க முடிவு செய்கிறார். அப்போது, DNA டெஸ்ட் ரிப்போர்டின் படி ஹேமாவும், லக்ஷ்மியும் தனது குழந்தைகள் தான் என்று தெரிந்து விட்டால் இங்கே வந்து கண்ணம்மா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு, மகிழ்ச்சியாக தனது வாழ்க்கையை வாழலாம் என்றும், ஒரு வேளை அவர்கள் இருவரும் தனது குழந்தைகள் இல்லை என்று வந்திவிட்டால் இனி இந்த வீட்டிற்கு வரவே கூடாது, அனைவரும் ஏமாற்றும் ஏமாளியாக வாழ்வதில் அர்த்தம் இல்லை. அதனை கண்டிப்பாக செத்து விட வேண்டும் என்று பாரதி முடிவெடுக்கிறார். இதனால் அடுத்து வரும் எபிசோடுகளுக்கான ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. கண்டிப்பாக DNA டெஸ்டின் முடிவால் பாரதி அசிங்கப்பட்டு தான் திருந்தபோகிறார்.