மாப்பிள்ளையை துரத்தி விடும் வெண்பா, பாரதி & கண்ணம்மாவுக்கு நன்றி சொல்லும் சக்தியின் பெற்றோர் – இன்றைய எபிசோடு!

0

மாப்பிள்ளையை துரத்தி விடும் வெண்பா, பாரதி & கண்ணம்மாவுக்கு நன்றி சொல்லும் சக்தியின் பெற்றோர் – இன்றைய எபிசோடு!

இதய அறுவை சிகிச்சை முடித்து கண் திறக்கும் சக்தி, பாரதி மற்றும் கண்ணம்மாவுக்கு நன்றி சொல்கிறாள். இதற்கிடையில் தனது திருமணத்தை கெடுக்கும் விதமாக ஆண் நண்பர்களுடன் பேசுவது போல நாடகமாடி மாப்பிள்ளையை துரத்தி விடுகிறார் வெண்பா.

பாரதி கண்ணம்மா

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் இன்றைய எபிசோடில் வெண்பா தன்னை பெண் பார்க்க வந்தவரிடம் தனக்கு குழந்தை கன்பார்ம் ஆகி இருப்பதாக சொல்லி நாடகமாடுகிறார். இதை நம்பும் மாப்பிள்ளை வீட்டார் இந்த சம்பந்தம் வேண்டாம் என நினைத்து, சொல்லாமல் கொள்ளாமல் அங்கிருந்து கிளம்பி விடுகின்றனர். மறுபக்கத்தில் இதய அறுவை சிகிச்சை முடித்து மருத்துவமனையில் இருக்கும் சக்திக்கு நினைவு திரும்புகிறது. அதை கண்டு அனைவரும் சந்தோஷப்பட அந்த குழந்தையை உற்சாகப்படுத்தும் விதமாக பேசுகிறார் பாரதி.

தொடர்ந்து கண்ணம்மாவை பார்க்க வேண்டும் என்று சக்தி சொல்ல நர்ஸ் அவரை அழைத்து கொண்டு வருகிறார். இப்போது கண்ணம்மா வந்ததும் அவரிடம் பேசும் சக்தி, நீங்கள் கொடுத்த தைரியத்தால் தான் நான் இப்படி இருக்கிறேன் என்று சொல்லி பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் நன்றி சொல்கிறாள். தொடர்ந்து, ஆயிஷாவின் அப்பா, அம்மா இருவரும் சக்தியை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வருகின்றனர். அப்போது சக்தியின் உடல் நலத்தை பற்றி ஆயிஷாவின் அம்மா விசாரிக்க, நீ இனி இவர்களையும் அம்மா, அப்பா என்று தான் சொல்ல வேண்டும் என சக்தியின் அப்பா சொல்கிறார்.

உடனே, சக்தியும் அவர்களை அம்மா, அப்பா என அழைக்க அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள். மறுபக்கத்தில், மாப்பிள்ளையை வீட்டை விட்டு ஓட விட்டதை நினைத்து சாந்தியிடம் சொல்லி சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார் வெண்பா. இப்போது, பாரதி மற்றும் கண்ணம்மா செய்த உதவிக்கு சக்தியின் அம்மா மற்றும் அப்பா இருவரும் மனப்பூர்வமாக நன்றி சொல்கிறார்கள். தொடர்ந்து, மாப்பிள்ளையை ஓட விட்ட சந்தோஷத்தில் குத்தாட்டம் போட்டு கொண்டிருக்கிறார் வெண்பா.

Exams Daily Mobile App Download

அதை பார்த்து விடும் ஷர்மிளா என்ன வெண்பா சந்தோஷமாக இருக்கிறாய் போல என கேட்க, அதை மறுக்கும் வெண்பா நான் உண்மையில் வருத்தப்படுகிறேன் அம்மா. நீ எதுக்கு இந்த வயசான காலத்துல எனக்கு மாப்பிள்ளை பார்த்து கஷ்டப்படுகிற. நானே என் வழிய பாத்துக்குறேன் என கேப்பில் கடா வெட்டுகிறார் வெண்பா. அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்னொரு மாப்பிள்ளையை ரெடி பண்ணி இருப்பதாக சொல்லும் ஷர்மிளா அவரை நாளை ஹோட்டலுக்கு சென்று பார்க்கும் படி வெண்பாவிடம் கூறுகிறார். ஆனால், எத்தனை பேர் வந்தாலும் அத்தனை பேரையும் ஓட விட்டு விட்டு, பாரதியை மட்டும் தான் திருமணம் செய்து கொள்வேன் என வெண்பா பேசுவதுடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!