புது கண்ணம்மாவுடன் தொடங்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீசன் 2? ரோஷினி விலகியதன் உண்மை காரணம்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து நடிகை ரோஷினி விலக இருப்பதாக வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைத் தகவல்கள் என சமீபத்திய செய்திகள் தெரிவிக்கிறது.
நடிகை ரோஷினி
பல்வேறு புதிய திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் தற்போது புதிய மாற்றங்கள் ஏற்பட இருப்பதாக சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதாவது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மா என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ரோஷினி இந்த சீரியலை விட்டு விலகுவதாக வெளியான ஒரு செய்தி பரவலாக பேசப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் நவ.8 முதல் 1 – 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாணவர்கள் கோரிக்கை!
இந்த தகவல் தான் கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படும் பொருளாக இருந்து வருகிறது. இப்போது, அதிக TRP ரேட்டிங்குடன் எவ்வித சிக்கல்களும் இல்லாமல் வெளியாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து நடிகை ரோஷினி விலகுவதற்கு என்ன காரணம் என ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளும், குழப்பங்களும் எழுந்துள்ளது. இது தவிர நடிகை ரோஷினி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகுவதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டு வருகிறது.
இந்தியக் கடற்படையில் 12வது முடித்தவர்களுக்கான வேலை – 2500 காலிப்பணியிடங்கள்
அதில் குறிப்பாக வரும் நாட்களில் கண்ணம்மா கதாப்பாத்திரத்தில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட இருப்பதாகவும், அவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்திருப்பதால் இனி சீரியலில் தொடர மாட்டார் என்றும் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மாவாக நடிகை ரோஷினி நடிக்கும் இறுதி கட்ட படப்பிடிப்பு காட்சிகள் நேற்று படமாக்கப்பட்டதாகவும் சில தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்கிடையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் கண்ணம்மா கதாப்பாத்திரத்தில் இனி சன் டிவி சீரியல் ‘சுந்தரி’ நடிகை கேப்ரியல்லா நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.