தமிழகத்தில் நவ.8 முதல் 1 – 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாணவர்கள் கோரிக்கை!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பை ஒரு வார காலம் ஒத்திவைக்க வேண்டும் என மாணவர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் அரசு சார்பில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நவம்பர் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதில் அறிவிக்கப்பட படி, நவம்பர் 1 முதல் 1 – 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வட்டார கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. இதனால் பள்ளிகள் சுத்தப்படுத்தப்பட்டு தேவையான பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே செப்.1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் நவம்பர் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு, பள்ளிகள் திறக்க அனுமதி – புதிய தளர்வுகள் அறிவிப்பு!
இதன் பின்னர் தனியார் பள்ளிகளின் கோரிக்கை, பெற்றோர்களின் எதிர்பார்ப்பு மற்றும் மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு பல்வேறு ஆலோசனைகளுக்கு பின் நவம்பர் 1 முதல் தொடக்க, நடுநிலை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டது. இதற்கிடையில் நவமபர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் குடும்பத்துடன் ஷாப்பிங் சென்று வருகின்றனர். எனவே அனைத்து பேருந்துகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. முக்கிய வீதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. இதனால் கொரோனா 3வது அலை ஏற்பட்டு விடுமோ என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.
நவம்பர் மாதம் வங்கிகளுக்கு 17 நாட்கள் விடுமுறை – RBI அறிவிப்பு! வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
மேலும் நவம்பர் 1ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட்டால் அடுத்து ஒருசில நாட்களில் தீபாவளி பண்டிகை வரவுள்ளது. இதனால் பள்ளிகள் திறப்பை மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி ஒரு வாரம் தள்ளிவைக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. ஏற்கனவே இதுபோன்ற கோரிக்கையை தமாகா தலைவர் ஜிகே வாசன் அவர்களும் முன்வைத்து உள்ளார். இதனால் 1-8ம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி நவம்பர் 8 முதல் பள்ளிகளை திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.