எழில் அமிர்தாவை மொத்தமாக பிரிக்க மாஸ்டர் பிளான் போட்ட ஈஸ்வரி.. அதிரடி முடிவு – ஷாக்கில் பாக்கியா!
பாக்கியலட்சுமி சீரியல் பல்வேறு கிளை கதைகளுடன் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது புதிய பிரச்சனை ஒன்று பாக்கியா வீட்டில் கிளம்பியுள்ளது.
பாக்கியலட்சுமி:
பாக்கியா கோபி தன்னை விட்டு பிரிந்து போன பிறகு கூட மனம் தளராமல், தனது தொழில் மீது அதிக ஆர்வம் காட்டி வாழ்வில் முன்னேறி வருகிறார். இந்நிலையில், எழில் மிகவும் சோகமாக இருப்பதை ஈஸ்வரி நோட்டமிட்டு அதை பற்றி கேள்வி எழுப்புகிறார். அப்பொழுது செழியன் எழில் அமிர்தா உறவை பற்றி ஈஸ்வரியிடம் கூறி விடுகிறார்.
Follow our Instagram for more Latest Updates
ஆனால் ஈஸ்வரியோ இதற்கு தான் சம்மதிக்க மாட்டேன் என்று உறுதியாக சொல்லுகிறார். மேலும் அமிர்தாவை தோழியாக மட்டும் பார்க்க வேண்டும் என சத்தியம் வேறு வாங்குகிறார் ஈஸ்வரி. எழில் மனதை முழுவதும் மாற்றுவதற்காக ஈஸ்வரி புது திட்டம் ஒன்றை போடுகிறார். அதற்காக எழிலுக்கு திருமணம் செய்ய முடிவெடுக்கிறார் ஈஸ்வரி.
இன்னும் ஒரே வாரத்தில் முடியவுள்ள பாரதி கண்ணம்மா – சீசன் 2வின் கதைக்களம் இதுதான்!
Exams Daily Mobile App Download
ஆனால் எழில், இது குறித்து என்ன முடிவெடுக்க போகிறார், பாட்டி சொன்ன பெண்ணை திருமணம் செய்ய போகிறாரா அல்லது அனைவரின் பேச்சையும் மீறி அமிர்தாவை திருமணம் செய்து கொள்வாரா என்று இனி வரும் எபிசோடுகளில் வர உள்ளன.