செப்.17 & 18 ஆம் தேதிகளில் பள்ளி, கல்லூரிகள் மூடல் – கனமழை எதிரொலி!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக செப்டம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிகள் மூடல்
நாடு முழுவதும் தற்போது கொரோனா 2 ஆம் அலை தொற்று ஓய்ந்திருக்கும் நிலையில், உத்தரபிரதேசத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் கடந்த மாதம் 16 ஆம் தேதி முதல் மீண்டுமாக திறக்கப்பட்டது. அந்த வகையில் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தில் தற்சமயம் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் செப்டம்பர் 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பணியில் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பு, ஓய்வு வயது அதிகரிப்பு – தமிழக அரசு உத்தரவு!
இருப்பினும், 12 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மேம்பாட்டுத் தேர்வுகளை நடத்தும் பள்ளிகள் மட்டும் திறந்திருக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, ‘உத்திரப் பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் பெய்து வரும் அதிகப்படியான மழையை கருத்தில் கொண்டு, அடுத்த 2 நாட்களுக்கு (செப்டம்பர் 17, 18) பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கும். ஆனால் இடைநிலை மேம்பாட்டு தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்’ என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4% இட ஒதுக்கீடு – கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!
அந்த வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளிகளில் மேம்பாட்டு தேர்வுகள் நடத்தப்படும் என்று இடைநிலைக் கல்வி கூடுதல் தலைமைச் செயலாளர் ஆராதனா சுக்லா குறிப்பிட்டுள்ளார். இதில் செப்டம்பர் 18 ஆம் தேதியன்று 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மேம்பாட்டுத் தேர்வுகள் தொடங்கும் என்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் அக்டோபர் 4 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு தேர்வுகள் அக்டோபர் 6 ஆம் தேதியும் முடிவடையும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.