பிக்பாஸ் வீட்டில் கணவர் பற்றி பேசாத தொகுப்பாளர் பிரியங்கா – காரணம் இது தானா?
விஜய் டிவியில் சிறந்த தொகுப்பாளராக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் பிரியங்கா. அவர் வாழ்க்கையில் திருமணம் குறித்து நடந்த சோகங்கள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
தொகுப்பாளர் பிரியங்கா:
விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அனைத்துமே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவை. அதற்கு முக்கிய காரணம் அதில் உள்ள தொகுப்பாளர்கள் தான். முதலில் மக்களிடம் பிரபலமான தொகுப்பாளராக டிடி இருந்தார். அவருக்கு அடுத்தபடியாக அந்த இடத்தை பிரியங்கா தான் பிடித்திருக்கிறார். அவர் நகைச்சுவையுடன் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவதை பார்க்க பல ரசிகர்கள் இருக்கின்றனர். எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும் பிரியங்கா நிகழ்ச்சிக்கு வந்தால் கட்டாயம் கலாய்கப்படுவார்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் விஜய்யுடன் நேரில் சந்திப்பு – வைரலாகும் புகைப்படம்!
இந்நிலையில் பல நிகழ்ச்சிகளில் பிசியாக இருந்த அவர் ஒரு மாற்றத்திற்காக தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றிருக்கிறார். அங்கே அவருக்கு முதலில் பல ரசிகர்கள் இருந்தாலும் அபிஷேக் உடன் கூட்டு சேர்ந்த பின் அவருக்கு கெட்ட பெயர் வர தொடங்கியது. இந்நிலையில் பாவ்னி, தாமரை என பலர் வெளிப்படையாக அவர்களது திருமண வாழ்க்கை பற்றி சொன்ன இடத்தில் பிரியங்கா தனது கணவர் பற்றி எதுவும் சொல்லவில்லை.
‘பாரதி கண்ணம்மா’ நடிகை ரோஷினி ஹரிப்ரியனின் புதிய லுக் – வைரலாகும் இன்ஸ்டா புகைப்படம்!
அவர் கணவர் குறித்த வதந்திகள் வெளியாகி வருகிறது. அவரது கணவரும் இவரும் தற்போது சேர்ந்து வாழவில்லை. இருவரும் விவாகரத்து வாங்கிவிட்டனர் என செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. இது குறித்து பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில் நானும் என் கணவரும் பிரிந்து தான் இருக்கிறோம். ஆனால் அவர் தான் எனக்கு கணவர், சில காரணங்களால் சேர்ந்து வாழவில்லை என சொல்லி இருக்கிறார். மேலும் எங்களுக்கு விவாகரத்து ஆகவில்லை எனவும் சொல்லி இருக்கிறார். ஆனால் பிக்பாஸ் வீட்டில் கணவர் குறித்து பேசாததற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை.