கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பிக் பாஸ் நடிகை – திரையுலகில் பரபரப்பு!

0
கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பிக் பாஸ் நடிகை - திரையுலகில் பரபரப்பு!
கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பிக் பாஸ் நடிகை - திரையுலகில் பரபரப்பு!
கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பிக் பாஸ் நடிகை – திரையுலகில் பரபரப்பு!

பட்டியலினத்தவர்களை அவதூறாக பேசிய பிக் பாஸ் நடிகை யுவிகா சௌத்ரி மன்னிப்பு கேட்டுள்ளார். அதனால் அவருக்கு ஹரியானா மாநில காவல்துறை ஜாமீன் வழங்கி அவரை விடுவித்துள்ளது.

பிக்பாஸ் நடிகை:

தமிழகத்தில் அதிக மக்களால் பார்க்கப்பட கூடிய நிகழ்ச்சி பிக்பாஸ் ஆகும். இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது முதலில் ஹிந்தி மொழியில் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கனடா மற்றும் பெங்காலி என 7 மொழிகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அதில் தமிழ் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு கொண்ட மீராமிதுன் என்பவர் பட்டியலினத்தை சேர்ந்த இயக்குனர்கள் மற்றும் நடிகர்களை அவதூறாக பேசி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதனால் பல்வேறு கட்சியினரும், மக்களும் அவரை கைது செய்ய கோரி வழக்கு தொடர்ந்தனர். அதனால் மீரா மிதுன் மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஆன்மிக தொடராக மாறும் ஜீ தமிழ் “செம்பருத்தி” சீரியல் – ரசிகர்கள் வருத்தம்!

பின்னர் கேரளாவில் பதுங்கி இருந்த அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீஸார் கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி கைது செய்தனர். மேலும் அவருக்கு துணையாய் இருந்த அவரது நண்பர் ஷாம் அபிஷேக்கையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பின்னர் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஹிந்தி பிக்பாஸ் சீசன் 9 ல் பங்குபெற்ற பாலிவுட் நடிகை யுவிகா சௌத்ரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பட்டியலினத்தவர்களை அவதூறாக பேசி சமூக வலைத்தளங்களில் ஒரு விடீயோவை வெளியிட்டிருக்கிறார். இதைத்தொடர்ந்து ஹரியானா மாநிலம் ஹன்சி காவல்நிலையத்தில் ராஜாத் கல்சான் என்பவர் யுவிகா சவுதரி குறித்து புகாரளித்துள்ளார்.

இளைய தளபதி விஜய்யை திட்டிய மனைவி சங்கீதா – ரசிகர்கள் ஷாக்!

பின்னர் யுவிகா சவுதரி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். யுவிகா சவுதரியிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அந்த வார்த்தைக்கு எனக்கு அர்த்தம் தெரியாது என்றும், யாரையும் புண்படுத்தும் வகையில் பேசவில்லை என்றும் கூறி அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு ஹரியானா உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற நடிகைகள் இவ்வாறு நடந்து கொள்வது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!