விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 இல் ரெட் கார்டு வாங்கப்போகும் அபிஷேக்? நடந்தது என்ன!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் தொடர்ந்து வீட்டின் விதிமுறைகளை அபிஷேக் மீறி வருகிறார். மேலும் வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்களை அவர் உருவ கேலி செய்து வருகிறார் அதனால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி:
பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் முதல் வாரம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தற்போது 16 நாள் ஆன நிலையில், முதல் வாரத்தில் தவிர்க்க முடியாத காரணங்களால் திருநங்கை நமீதா மாரிமுத்து மற்றும் இரண்டாவது வாரத்தில் நாமினேட் செய்யப்பட்டு மக்களின் குறைவான வாக்குகளை பெற்று நாதியா சாங் வீட்டை விட்டு வெளியேறினார். தற்போது 16 போட்டியாளர்கள் வீட்டில் இருக்கிறார்கள். இந்நிலையில் இரண்டாவது வார தலைவர் பதவிக்கான போட்டிகள் நேற்று நடைபெற்றது.
தாமரை செல்விக்கு ஆதரவாக நிற்கும் போட்டியாளர்கள், அதிருப்தியில் இமான் அண்ணாச்சி – வெளியான ப்ரோமோ!
அதில் சிபி தலைவர் பதவிக்கான போட்டியில் வெற்றி பெற்றார். அந்த போட்டி நடைபெறும் போது போட்டியாளர்கள் வீட்டின் விதிமுறைகளை கடைபிடித்த ஐந்து பேர் தேர்வு செய்யப்பட்டார்கள். அவர்களை மற்ற போட்டியாளர்கள் எதாவது ஒரு உணர்வை வெளி கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டது. இசைவாணி, சிபி, பாவனி மற்றும் ராஜு ஆகிய நான்கு பேர் தேர்வு செய்யப்பட, வீட்டில் ஜொலித்தவர் என்கிற பட்டம் வாங்கிய இமான் அண்ணாச்சியும் இவர்களுடன் இணைக்கப்பட்டார். மற்ற போட்டியாளர்கள் முதலில் இமான் அண்ணாச்சியை சிரிக்க வைத்தார்கள்.
அதன் பின் சிபி ராஜூ பாவனியை சிரிக்க வைக்க என்னவோ கத்திட்டு போங்க என்றபடி அசையாமல் இருந்தார் ராஜு. மேலும் இசைவாணியின் வாழ்க்கையை பற்றி பேச இமான் அண்ணாச்சி கோவப்பட்டார். அவரை வருண் கத்தி அனுப்ப கூட்டமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த நேரம் பார்த்து அபிநய் இசையை பயமுறுத்த அவர் நிகழ்ச்சியில் இருந்து தோற்றுவிடுகிறார். ராஜூவை எப்படியாவது அவுட்டாக்கி விட வேண்டும் என்று எண்ணிய சின்னப்பொண்ணு, தனக்கு டிஸ்லைக் கொடுத்த விஷயத்தை உரக்க குரலில் சுட்டித்தனமாகவே கூறினார்.
விஜய் டிவியில் புதிய கதைக்களத்துடன் ‘முத்தழகு’ சீரியல் – ப்ரோமோ வெளியீடு! ரசிகர்கள் உற்சாகம்!
இந்நிலையில் அந்த போட்டியில் அபிஷேக்கின் உண்மை முகம் வெளியே வந்தது. அவருடைய கேரக்டர் பிடிக்காமல் அவருக்கு நிறைய பேர் நாமினேஷன் செய்து போட்டியில் இருந்து வெளியே அனுப்ப இருக்கிறார்கள். ரசிகர்களும் அதே எண்ணத்தில் தான் இருக்கிறார்கள். மேலும் நாமினேஷன் செய்தவர்களை பற்றி வெளியே பேச கூடாது. ஆனால் ப்ரியங்கா அபிஷேக் நாமினேஷன் செய்தவர்களை பற்றி பேசுகிறார்கள். ராஜு பேச கூடாது என சொல்லியும் அபிஷேக் அவரை சொல்ல சொல்லி வற்புறுத்துகிறார். அதனால் விரைவில் அபிஷேக்கிற்கு ரெட் கார்டு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.