துணிக்கடையில் வேலை பார்க்கும் விஜய் டிவி ‘பிக் பாஸ்’ தாமரையின் கணவர்? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் இந்த ஆண்டு பல புது முகங்கள் களமிறக்கப்பட்டனர். அதில் நாடக கலைஞரான தாமரையின் குடும்பம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பிக்பாஸ் நிகழ்ச்சி:
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மாறுபட்ட கான்செப்ட் உடன் ஒளிபரப்பாகி வருகிறது. ஏற்கனவே நான்கு சீசன்கள் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. காரணம் அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியது நடிகர் கமல்ஹாசன் என்பது தான். இந்த ஆண்டு ஐந்தாவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு சீசனிலும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கும்.
‘பாக்கியலட்சுமி’ சீரியலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பள்ளி தோழி – கதறி அழுத இனியா!
அந்த வகையில் இந்த சீசனில் பல புது முகங்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். கடந்த சீசனில் அனைவரும் தெரிந்த போட்டியாளர்களாக இருந்ததால் விறுவிறுப்பு சற்று குறைவாக இருந்தது. அதனை மனதில் வைத்து கொண்டு இந்த சீசன் போட்டியாளர்கள் களமிறங்கி இருக்கின்றனர். அதில் நாடக கலைஞர் தாமரை மற்றும் வருண் போன்றவர்கள் சின்னத்திரைக்கு பரிட்சையம் இல்லாதவர்கள். தாமரைக்கு பல திறமைகள் இருப்பதால் அவர் தற்போது மக்களின் ஆதரவுடன் 80 நாட்களை கடந்து இருக்கிறார்.
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக் செய்து அசத்திய ‘பாண்டியன் ஸ்டார்ஸ்’ சுஜிதா – வைரல் வீடியோ!
மேலும் அவர் தன்னுடைய வாழ்க்கை கதையை சொல்லும் போது தான் சாதாரண குடும்பத்தில் பிறந்தவள் பிறந்தது முதல் ரொம்ப கஷ்டம் தான் அப்பறம் முதல்வர் திருமணம் முடிந்து அவர் குடித்துவிட்டு சண்டை போடுவார். பின் அவரை பிரிந்து இவரை திருமணம் செய்து கொண்டுள்ளேன். எனக்கு இரண்டு மகன்கள் இருப்பதாக சொல்லி இருக்கிறார். மூத்த மகனை பார்க்க வேண்டும் என ஆசைப்படுவதாக சொன்னார். நேற்றைய எபிசோடில் அவரது கணவரும், இரண்டாவது மகனும் வந்திருக்கின்றனர். அவர் கணவர் சாதாரண துணி கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். அவர் அந்த துணிக்கடையில் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.