‘பாக்கியலட்சுமி’ சீரியலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பள்ளி தோழி – கதறி அழுத இனியா!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியா மற்றும் அவரது நண்பர்கள் ஸ்கூலில் ஒரு ஆசிரியரால் மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில் இனியாவின் தோழி அதை நினைத்து தற்கொலை செய்து கொள்ள இனியா கதறி அழும் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் பல திருப்பங்கள் வெளியாகி வருகிறது. பாக்கியா தொழிழில் முன்னேறுவதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். மேலும் கோபி ராதிகாவை திருமணம் செய்ய என்னவெல்லாம் பொய் சொல்கிறார் என ரசிகர்கள் ஆச்சர்யத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் இனியாவின் ஸ்கூலில் பெரிய பிரச்சனை ஒன்று நடைபெறுகிறது. கம்ப்யூட்டர் ஆசிரியர் ஒருவர் இனியாவின் தோழியிடம் தவறாக நடந்து கொள்ள அவர் வருத்தமாக இருக்கிறார். அதனால் அவரை நினைத்து இனியா உள்ளிட்ட மற்ற தோழிகள் வருத்தமாக இருக்கின்றனர்.
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக் செய்து அசத்திய ‘பாண்டியன் ஸ்டார்ஸ்’ சுஜிதா – வைரல் வீடியோ!
இது பற்றி பிரின்சிபால் மேடத்திடம் சொல்ல போக அந்த நேரம் அந்த சார் வருகிறார். அவரை பார்த்ததும் பயந்து விடுகின்றனர். இனியா சரியாக சாப்பிடாமல் வருத்தமாக இருக்க பாக்கியா என்ன ஆச்சு என அடிக்கடி கேட்கிறார். ஆனால் இனியா சொல்ல பயந்து கொண்டு சொல்லாமல் இருக்கிறார். மறுபக்கம் அந்த ஆசிரியர் அனைவரையும் கூப்பிட்டு மேடத்திடம் இது பற்றி சொன்னால் மார்க் போட மாட்டேன். அப்பறம் பத்தாம் வகுப்பில் வேற ஸ்கூல் போக முடியாது என மிரட்டுகிறார்.
விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறும் அக்ஷரா – ரசிகர்கள் ஷாக்!
அதனால் இனியாவின் தோழி மிகுந்த மன வேதனையில் இருக்கிறார். இது பற்றி வீட்டில் சொல்ல முடியாது என மிகுந்த குழப்பத்தில் இருக்க, இனியா நான் என் வீட்டில் சொல்கிறேன் என சொல்கிறார். ஆனால் மற்ற தோழிகள் வேண்டாம் என சொல்கிறார்கள். இந்நிலையில் அடுத்த வார எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் இனியா அம்மா அம்மா என அழுது கொண்டே வர குடும்பத்தினர் என்ன நடந்தது என பதறி வந்து கேட்கின்றனர். அப்போது என் தோழி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டால் என இனியா அழுகிறார். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.