‘பாரதி கண்ணம்மா’ நடிகை ரோஷினிக்கு வாழ்க்கை கற்றுக்கொடுத்த பாடம் – வைரலாகும் இன்ஸ்டா பதிவு!
தமிழ் சின்னத்திரை சீரியல் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலை விட்டு விலகிய பிற்பாடு வாழ்க்கைக்கு அவசியமான ஒரு விஷயத்தை, இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள அப்பதிவு தற்போது கவனம் பெற்று வருகிறது.
நடிகை ரோஷினி
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலம் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் இதயங்களையும் கொள்ளை கொண்டவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். மாடலிங் துறையில் படிப்படியாக முன்னேறி ஒரு நிரந்தரமான இடத்தை பிடித்திருந்த ரோஷினிக்கு, நடிகை என்ற அடையாளத்தை பெற்று தந்தது இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தான். இத்தொடரில் கண்ணம்மா என்ற கனமான கதாப்பாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த ரோஷினிக்கு ரசிகர்கள் ஏகப்பட்ட ஆதரவுகளை கொடுத்து வந்தனர்.
‘பிக் பாஸ்’ வனிதாவிற்கு விமான நிலையத்தில் ஏற்பட்ட சோகம் – 3 மணிநேரம் என்ன நடந்தது?
இத்தொடரில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக கண்ணம்மாவாக பயணித்து வந்த நடிகை ரோஷினி சமீபத்தில் இந்த சீரியலை விட்டு விலகினார். இவரது திடீர் விலகல் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் அத்தனை பேருக்கும் வருத்தத்தை கொடுத்திருந்தது. ஏனென்றால் கண்ணம்மா என்றவுடன் நடிகை ரோஷினியை சொல்லும் அளவுக்கு பெயர் பெற்றிருந்த இவர் இந்த சீரியலை விட்டு விலகுகிறார் என்பதை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
என்றாலும் நல்ல ஒரு தொடக்கத்துக்காக தான் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலை விட்டு நடிகை ரோஷினி விலகுகிறார் என்பது தெரிந்ததும், இது ரசிகர்களுக்கு சற்று ஆறுதலை அளித்தது. இந்நிலையில் நடிகை ரோஷினி ‘வாழ்க்கை எப்போதும் எளிதாகவும், மன்னிக்ககூடியதாகவும் இருக்காது. நாம் தான் வலிமையாக இருக்க வேண்டும்’ என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இவரது இந்த பதிவு பலருக்கும் ஊக்கம் அளிக்க கூடியதாக மாறி இருக்கிறது.
திருமணத்தின் போது கண்கலங்கிய விஜய் டிவி சீரியல் நடிகை நக்ஷத்திரா – வைரலாகும் புகைப்படங்கள்!
இதனுடன், தமிழ் சின்னத்திரையில் ஒரு முக்கியமான இடத்தை வகித்திருக்கும் நடிகை ரோஷினி ஏகப்பட்ட போராட்டங்களை தாண்டி தான் இந்த இடத்துக்கு வந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அதுவும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடிக்க துவங்கிய போது இவர் எல்லாம் ஒரு நடிகையா, இவருக்கு நடிப்பே வரவில்லை என பல்வேறு விமர்சனங்களை முகத்துக்கு முன்பாகவே பெற்றிருப்பதாக பதிவு செய்திருக்கிறார் இவர். இதையெல்லாம் தாண்டி தற்போது தமிழ் சினிமாவில் தடம் பதிக்க இருக்கும் ரோஷினிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.