திருமணத்தின் போது கண்கலங்கிய விஜய் டிவி சீரியல் நடிகை நக்ஷத்திரா – வைரலாகும் புகைப்படங்கள்!
விஜய் டிவி ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் நடித்து வரும் நடிகை நக்ஷத்திரா தனது நீண்ட நாள் காதலரான ராகவ் என்பவரை இன்று (டிச.9) திருமணம் செய்துகொண்டுள்ளார். கோலாகலமாக நடந்தேறிய இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை நக்ஷத்திரா
தமிழ் டிவி சேனல்களில் விஜேவாக மக்களுக்கு பரீட்சயமான நடிகை நக்ஷத்திரா தற்போது விஜய் டிவியில் ‘தமிழும் சரஸ்வதியும்’ என்ற சீரியலில் நடித்து வருகிறார். விஜேவுக்குரிய துறுதுறுப்பான பேச்சால் பல்வேறு ரசிகர்களை கவர்ந்து வைத்திருக்க கூடிய நடிகை நக்ஷத்திராவுக்கு தற்போது கோலாகலமாக திருமணம் நடந்திருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டில் திருமணம் செய்துகொண்ட சின்னத்திரை பிரபலங்களின் பட்டியலில் புதிதாக இணைந்திருக்கிறார் நடிகை நக்ஷத்திரா.
‘பிக் பாஸ்’ வனிதாவிற்கு விமான நிலையத்தில் ஏற்பட்ட சோகம் – 3 மணிநேரம் என்ன நடந்தது?
இந்த ஆண்டு துவக்கத்தில் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட காதல் ஜோடிகளான நக்ஷத்திரா மற்றும் ராகவ் இருவருக்கும் எப்போது திருமணம் நடைபெறும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வந்தனர். இந்த எதிர்பார்ப்புக்கு பதிலளிக்கும் விதமாக இன்று (டிச.9) நக்ஷத்திரா மற்றும் ராகவ் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்திற்காக பல மாதங்களாக திட்டமிட்டு வந்த நடிகை நக்ஷத்திரா, கொரோனா காலத்திலும் தான் விருப்பப்பட்டபடி மிகவும் பிரமாண்டமாக திருமணத்தை நிகழ்த்தி இருக்கிறார்.
“வாழ வேண்டிய வயதில் வாடிய மலர் சித்ரா” பாண்டியன் ஸ்டோர்ஸ் கதாபாத்திரங்கள் நினைவஞ்சலி!
அந்த வகையில் திருமணத்திற்கு முன்பாக நலங்கு, மெஹந்தி என ஒவ்வொரு நிகழ்வையும் தனது ஆசைப்படி நடத்தி இருக்கும் நடிகை நக்ஷத்திரா, தற்போது திருமணம் முடிந்த சந்தோஷத்தில் இருக்கிறாராம். இந்நிலையில் நடிகை நக்ஷத்திராவுக்கு ராகவ் தாலி கட்டும் சமயத்தில் அவர் கண் கலங்க கணவர் ராகவ் அவரை முத்தமிட்டு தேற்றுவது போல இந்த திருமணத்தில் சில நெகிழ்ச்சியான தருணங்கள் நடந்திருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் வலைதளங்களில் வெளியாக இந்த புதுமண ஜோடிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.